செய்திகள் :

மக்களின் நம்பிக்கை சின்னமாக தாமரை உள்ளது: அமித் ஷா

post image

புதுதில்லி: பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாளில் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டு மக்களின் இதங்களில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் சக்திவாய்ந்த சின்னமாக தாமரை சின்னம் உருவெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில், இன்று நாட்டு மக்களின் இதங்களில் தாமரை நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் புதிய சின்னமாக விளங்குகிறது. கடந்த பத்தாண்டுகளில் பாஜக செய்துவந்த சேவை, பாதுகாப்பு மற்றும் கலாசார விழிப்புணர்வு பணிகள் வரும் நாள்களில் மைல்கற்களாக மாறும்” என்று கூறினார்.

“கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள், கட்சியில் கருத்தியல் உறுதிப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தொடர்ந்து பங்களிப்பார்கள்” என்று மேலும் கூறினார்.

370 ஆவது சட்டப்பிரிவை ரத்து மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இயக்கம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய சாதனைகளை நினைவு கூர்ந்த அமித் ஷா, நமது கட்சி ஏழை எளிய மக்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களின் நலனை எப்போதும் உறுதி செய்துள்ளது என்றார்.

பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு: துணை முதல்வர் உதயநிதி

கடந்த 40 ஆண்டுகளில் ஒரு அரசியல் கட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பாஜக விளங்குகிறது. மக்களை மதிக்கவும், நாட்டில் உள்ள எழை எளிய மக்களுக்க தேவையான வீடு, உணவு, சுகாதாரம், காப்பீடு போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் விவசாயிகளின் நலன்களை மேம்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது என்பதை பாஜக நிரூபித்துள்ளது என்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சியாமா பிரசாத் முகர்ஜியால் 1950 இல் ஜனசங்கம் நிறுவப்பட்டது. இதுவே பாஜக தொடக்கத்துக்கு அடிப்படை. 1977 இல் ஏமர்ஜென்சிக்கு பிறகு காங்கிரஸை எதிர்க்க ஜனசங்கம் ஜனதா கட்சியுடன் இணைந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்புடன் ஏற்பட்ட முரண்டுபாடுகள் காரணமாக ஜனதா கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் 1980 ஏப்ரல் 6 இல் பாரதிய ஜனதா கட்சியை நிறுவினர்.

அந்த கட்சியில் இருந்து அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி என இதுவரை இரண்டு பிரதமர்கள் நாட்டுக்காக பணியாற்றியுள்ளனர்.

1996, 1998 மற்றும் 1999 மக்களவைத் தேர்தல்களில் அந்தக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 2014, 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது அதன் வரலாற்றில் மிக உயர்ந்த இடமாகும்.

வக்ஃப் சட்டம்: திட்டமிட்டபடி நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம்! - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திட்டமிட்டபடி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு தில்லியின் காட்வாரியா சாராய் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வந்த பாபியா காத்தூன் (வயது 3... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் தில்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென இன்று(வியாழக்கிழமை) தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்... மேலும் பார்க்க

ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!

ஈரான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் அவர்களது தாயகம் கொண்டு செல்லப்பட்டது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தின் மெஹ்ர்ஸ்தான் மாவட்டத்த... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே பழமை வாய்ந்த சிவன் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்

வாணியம்பாடி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத அதிதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இசையமைப்பாளா் இளையராஜா வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பழைய... மேலும் பார்க்க

நாத்திகம் பெயரில் நாடகமாடும் கூட்டத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: அண்ணாமலை

சென்னை: ஹிந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடா்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவாா்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.திமுக அமைச்சா்களிடையே, முதல்வா் குடும்ப... மேலும் பார்க்க