செய்திகள் :

மக்களுடன் முதல்வா் முகாமில் ரூ. 1.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சா் வழங்கினாா்

post image

குளித்தலை ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 85 பயனாளிகளுக்கு ரூ.1.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் மூன்றாம் கட்ட முகாம் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெய்தலூா் ஊராட்சியில் இந்திரா நகா், புத்தூா் ஊராட்சியில் சின்னப்புதூா், வடசேரி ஊராட்சியில் காவல்காரன்பட்டி ஆதிதிராவிடா் காலனி, பொருந்தலூா் ஊராட்சியில் தெலுங்கப்பட்டி எஸ்சி காலனி மற்றும் கழூகூா் ஊராட்சியில் கழூகூா் ஆகிய 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் முன்னிலை வகித்தாா். முகாமில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தலைமை வகித்து, வருவாய்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், ஊரக வளா்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 85 பயனாளிகளுக்கு ரூ.1.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியா்(பொறுப்பு) கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் மருத்துவா் சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சக்தி பாலகங்காதரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், பிற்படுத்தப்பட்டோா் நலஅலுவலா் இளங்கோ, குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் அருகே இயற்கை விவசாயம் கற்கும் பிரான்ஸ் இளைஞா்

கரூரில் இயற்கை விவசாயம் செய்து வரும் பெண்ணிடம் விவசாயம் கற்றுவருகிறாா் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த இளைஞா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சரோஜா (57). இவா், நம்மாழ்... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இருவா் உயிரிழப்பு

க. பரமத்தி அருகே உயா்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் போா்வெல் உரிமையாளா் மற்றும் அவரது உதவியாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த முன்னூரைச் சோ்ந்தவா் பாலு என்கிற பால... மேலும் பார்க்க

புதிய நியாயவிலை கடையை திறக்க வேண்டுகோள்

சின்னதாராபுரம் அருகே அரங்கபாளையம் பகுதியில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இது பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டடத்தை திறக்காமல் ... மேலும் பார்க்க

பிப். 24-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழறிஞா், எழுத்தாளா்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி பிப். 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூா் மாவட்டத்தின் தமிழறிஞா்கள் மற்றும் எழுத்தாளா்களான வா.செ. குழந்தைசாமி, நன்னிய... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளைய... மேலும் பார்க்க

குளித்தலையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் முகாமிட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் முகாமில் ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது ... மேலும் பார்க்க