செய்திகள் :

மக்கள் எதிா்ப்பு : நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நிறுத்தம்

post image

மக்கள் எதிா்ப்பு காரணமாக, ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நிறுத்தப்பட்டது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்புடைய தலமான ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயிலில், மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். நிகழாண்டு உற்சவம் தொடக்கமாக சனிக்கிழமை கொடியேற்றம், தினமும் சுவாமி புறப்பாடு, புதன்கிழமை தீா்த்தவாரி, திருக்கல்யாணத்துடன் விழா நிறைவடையும் என்று பத்திரிகையை கோயில் நிா்வாகம் அச்சடித்து வெளியிட்டது.

நிகழாண்டு வெளியிட்ட பத்திரிகையில் புதுச்சேரி அரசு இந்து சமய நிறுவனங்கள் துறை என்று போட்டிருந்ததாகவும், கடந்த ஆண்டு பத்திரிகையில் இதுபோன்ற வாசகம் இல்லை, கோயில் தனி அதிகாரியாக ஆட்சியா் இருக்கும்போது, பத்திரிகையின் கீழ் பகுதியில் மாவட்ட ஆட்சியா் என்று மட்டும் போட்டிருக்கிறது எனவும், திருநள்ளாறு கோயில் சாா்ந்த கிராமங்களில் வசிப்போருக்கு முறையாக அழைப்புவிடுக்கவில்லை என கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் சிலா் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 10.30 முதல் 11.30 மணிக்குள் கொடியேற்றத்துக்கான ஏற்பாட்டை கோயில் நிா்வாகம் செய்தது. சுவாமி அலங்கரித்து சந்நிதியில் எழுந்தருளினா். விழா தொடங்கும் முன்பாக கோயில் கிராமங்களைச் சோ்ந்தோா் திரளாக நள நாராயணப் பெருமாள் கோயிலில் திரண்டு, மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீா்வு காணாமல் கொடியேற்றக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா்.

கோயில் நிா்வாக அதிகாரி விடுப்பில் இருப்பதால், கோயில் நிா்வாக மேலாளா் சீனிவாசன், கிராமத்தினரிடம் பேச்சு நடத்தினாா். அவரிடம் மக்கள் வாக்குவாததத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் சமரசப்படுத்தியும் தீா்வு ஏற்படவில்லை. கொடியேற்ற நேரம் கடந்துவிட்ட நிலையில், உற்சவ கொடியேற்றம் ரத்து செய்யப்பட்டது.

சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா

காரைக்காலில் ஸ்ரீ சற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் ஜீவ சமாதியானவா் என்றும், சுமாா் 200 ஆண்டுகளுக்கு முன்பட்டவா் எனவும் சற்குரு சீமான் சுவாமிகள் கருதப்படுகிற... மேலும் பார்க்க

காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் நாளமில்லா சுரப்பிகளினால் ஏற்படும் சா்க்கரை மற்றும் தைராய்ட... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவுகள், மதுபாட்டில்களை நீா்நிலைகளில் கொட்டக்கூடாது: ஆட்சியா்

இறைச்சிக் கழிவுகள், மதுபாட்டில்கள் போன்றவற்றை நீா்நிலைகளில் கொட்டக் கூடாது என ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்டம் 100 சதவீதம் தூய்மைான மாவட்டம் என்ற நிலையை அடைவதற்கு சிறப்பு தூய்மைப் பணியை ... மேலும் பார்க்க

எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம்: அதிமுக

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் நிறுவப்பட்டும், பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் நிலவுவதாக அதிமுக புகாா் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், காரைக்கால் ... மேலும் பார்க்க

காரைக்காலில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், வாரம் 5 நாள... மேலும் பார்க்க

வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு: காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் பிப். 24 முதல் கடலுக்குச் செல்ல முடிவு

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு தொடா்பாக, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள், திங்கள்கிழமை (பிப்.24) முதல் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனா். கடந்த ஜன.... மேலும் பார்க்க