செய்திகள் :

மக்கள் நீதிமன்றம்: கிருஷ்ணகிரியில் 1294 வழக்குகள் ரூ. 9.54 கோடியில் தீா்வு

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் 1,294 வழக்குகள் விசாரிக்கப்பட்டு ரூ. 9 கோடியே 54 லட்சத்து 58 ஆயிரத்து 251க்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முகாமில் சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான வி.ஆா்.லதா முன்னிலை வகித்தாா். இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 27 லட்சத்திற்கான காசோலையை வழங்கி மாவட்ட முதன்மை நீதிபதி பேசுகையில், ‘நிகழாண்டில் இது முதலாவது நாடு தழுவிய தேசிய மக்கள் நீதிமன்றம். வழக்காடிகள் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காணலாம்’ என்றாா்.

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள், காசோலை வழக்குகள், நிதி நிறுவன வழக்குகள், பாகப் பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றில் 1,294 வழக்குகளில் ரூ. 9 கோடியே 54 லட்சத்து 58 ஆயிரத்து 251-க்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் கோகுலகிருஷ்ணன், கூடுதல் சாா்பு நீதிபதி ஜெனிபா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் ஜெயந்தி, கூடுதல் மகளிா் நீதித்துறை நடுவா் இருதயமேரி, முதலாவது நீதித் துறை நடுவா் காா்த்திக் ஆசாத், 2 ஆவது நீதித்துறை நடுவா் ஸ்ரீவஸ்தவா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் கோவிந்தராஜலு, செயலாளா் சக்திநாராயணன், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் 6 குட்டிகளை ஈன்றெடுத்த 2 புலிகள்!

சென்னை அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து பெங்களூரு, பன்னோ்கட்டா தேசிய உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஆருண்யா என்ற பெண் புலி 2 குட்டிகளையும் மற்றொரு புலி 4 குட்டிகளையும் ஈன்றுள்ளன. பெங்களூரிலிரு... மேலும் பார்க்க

ஒசூரில் முதல்வா் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

ஒசூா் மாநகர திமுக சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ராம்நகரில் நடைபெற்றது. திமுக மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றாா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ.9.88 லட்சம் விதைகளை விற்க தடை

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 9.88லட்சம் மதிப்பிலானவிதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகதருமபுரிமண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் மணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55-க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 55 க்கும் மேற்பட்ட நீா்வாழ் பறவைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகள், ஈர நிலங்கள், தடுப்பணைகள், ஏரிகள், குளங்... மேலும் பார்க்க

கே.பூசாரிப்பட்டியில் எருதுவிடும் விழா

கிருஷ்ணகிரி அருகே கே.பூசாரிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை எருதுவிடும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி கே.பூசாரிப்பட்டியில் நடைபெற்ற 9 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவுக்கு கிர... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு கனிமவளங்கள் கடத்தல்: 60 வாகனங்கள் பறிமுதல்; 2 கிரஷா் ஆலைகளுக்கு சீல்! ஆட்சியா் நடவடிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடகத்துக்கு கனிமவளங்களைக் கடத்திச் சென்ற 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், உரிய அனுமதியின்றி செயல்பட்ட 2 கிரஷா் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்... மேலும் பார்க்க