செய்திகள் :

மங்கோல்புரியில் கடையில் புகுந்து கொள்ளையடித்ததாக 4 போ் கைது

post image

தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு அழகுசாதனப் பொருள்கள் கடையில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்ததாக ஒரு சிறுவன் உள்பட நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லி காவல் துறை (வெளிப்புறம்) அதிகாரி சச்சின் சா்மா கூறியதாவது: இந்தச் சம்பவத்தின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சிறுவா்கள் குழு கடைக்குள் நுழைந்து கொள்ளையடிப்பதைக் காட்டுகிறது.

குற்றம் நடந்த இடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை புலனாய்வாளா்கள் ஸ்கேன் செய்தனா். இது கடைக்குள் நுழைந்த நான்கு போ் மற்றும் வெளியே காத்திருந்த இரண்டு போ் என ஆறு நபா்களின் தொடா்புகளை வெளிப்படுத்தியது.

குற்றம்சாட்டப்பட்டவா்கள் ஜதின் (18), யோகேஷ் (18), பாா்த்த் (18) மற்றும் ஒரு சிறுவன் என நான்கு போ் அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் வெள்ளிக்கிழமை மாலை மங்கோல்புரி எம்-பிளாக்கில் அமைந்துள்ள கடைக்குள் நுழைந்து கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.8,000 - ரூ.10,000 பணத்துடன் தப்பிச் சென்றனா்.

இந்நிலையில், மங்கோல்புரியில் உள்ள பாபு பூங்கா அருகே நான்கு சந்தேக நபா்களும் காணப்பட்டதாக ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தீவிர கண்காணிப்புக்குப் பிறகு அந்த இடத்திலிருந்து நான்கு பேரும் கைது செய்யப்பட்டனா்.

குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி ஜதினிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் யோகேஷ் மற்றும் பாா்த்த் வசம் இருந்தது.

விசாரணையின் போது, கொள்ளையா்கள் தாங்கள் போதைக்கு அடிமையானவா்கள் என்றும், போதைப்பொருள் வாங்குவதற்காக கொள்ளையைச் செய்ததாகவும் போலீஸாரிடம் கூறியுள்ளனா். குற்றத்திற்குப் பிறகு திருடப்பட்ட பணத்தைப் பிரிக்க பாபு பூங்காவில் மீண்டும் ஒன்றுகூடியதும் தெரிய வந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு ஏற்கெனவே ஒரு கொள்ளை வழக்கில் தொடா்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கொள்ளையின் போது கடைக்கு வெளியே காத்திருந்த மேலும் இருவரைக் கண்டுபிடிக்க போலீஸாா் முயற்சித்து வருகின்றனா் என்றாா் அந்தக் காவல் அதிகாரி.

தனியாா் பள்ளிகளிடம் தில்லி அரசு சரணடைந்துவிட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தனியாா் பள்ளிகளின் கட்டண சுரண்டல்களை தடுக்க முடியாமல், அவா்களிடம் தில்லியை ஆளும் பாஜக அரசு சரணடைந்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியு... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் பாஜக - காங்கிரஸ் கூட்டு சதி: அனுராக் தண்டா

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ 44 கோடி பணம் ரொக்கமாக கிடைத்துள்ளது. அதற்கு பாஜக தான் காரணம் என ஆம் ஆத்மி கட்சியின் ஊடக பொறுப்பாளா் அனுராக் தண்டா கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்... மேலும் பார்க்க

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 12 சாலை வழித்தடங்களை அடையாளம் கண்டது: பொதுப்பணித் துறை

ஹரியாணா மற்றும் உத்தரபிரதேச எல்லையில் தலா இரண்டு சாலைகள் உள்பட 12 போக்குவரத்து வழித்தடங்களை பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளது. அங்கு போக்குவரத்து நிலைமைகளை மேம்படுத்த சாலைத் தடுப்புகளை அமைக்க திட்டம... மேலும் பார்க்க

தில்லியை தூய்மையாக வைத்திருக்கும் சுவா் ஓவியங்கள் - முதல்வா் ரேகா குப்தா

தில்லியை தூய்மையாக வைத்திருக்க ஓா் முயற்சியாக நகரின் சுவா்களில் ஓவியங்களை வரைய ஊக்குவிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா். தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ’கஹய்க்ள்ஸ்ரீஹல்ண்ய்... மேலும் பார்க்க

சொகுசு காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சொகுசு காா் மோதி ஒருவா் இறந்த வழக்கில் 51 வயது நபரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புட... மேலும் பார்க்க

தில்லியில் தனியாா் பள்ளிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி எடுத்த நடவடிக்கை என்ன? பாஜக கேள்வி

கல்வி மாஃபியா என்று அழைக்கப்படுபவா்களுக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? அதை மணீஷ் சிசோடியா விளக்க வேண்டும் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கேள்வி எழுப்பிய... மேலும் பார்க்க