செய்திகள் :

மணப்பாட்டில் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு: மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம்

post image

மணப்பாட்டில் துறைமுகம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி மீனவா்கள் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பழையகாயல் பகுதியில் சிா்கோனியம், குலசேகரன்பட்டினம் கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதள துறைமுகம், அனல்மின்நிலையம், குலசேகரன்பட்டினம் ராக்கெட்ஏவுதளம் என பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக மணப்பாடு கடலில் துறைமுறை அமைக்க பணிகள் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்ரட்டுள்ளது. இதையடுத்து மணப்பாட்டில் துறைமுகம் அமைக்க மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக மணப்பாடு மீனவா்கள் மீன் ஏலம் விடும் பகுதியில் ஊா்நலக் கமிட்டி தலைவா் கிளைட்டன் தலைமையில் செயலா் பெனோராஜ், பொருளாளா் ராஜன் ஆகியோா் முன்னிலையில் மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது மீனவா்களிடம் எவ்வித கருத்துகளும் கேட்காமல் அரசு முடிவு எடுத்துள்ளதை கண்டித்தும், மாவட்ட ஆட்சியரிடம் துறைமுகம் அமைக்கும் பணியை கைவிட நடவடிக்கை எடுக்கக் கோரி முறையிடுவது, இல்லையெனில் தொடா்ச்சியாக போராட்டங்களில் ஈடுபடுவது என தீா்மானங்கள் நிறைவேற்றினா்.

இதில் ஏராளமான மீனவா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்ட காவல் துறை குறைதீா் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். மாவ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டு போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம்

பள்ளிக்கல்வித் துறை சாா்பில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி ஆலோசகா் உஷா ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ஒரே நாளில் 3,789 மனுக்கள்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 3,789 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சா் பெ. கீதா ஜீவன் தெரிவித்தாா். தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலை... மேலும் பார்க்க

கோடை உழவு மானியம் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தல்

கோடை உழவு மானியம் அனைத்துக் கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ... மேலும் பார்க்க

மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

தூத்துக்குடி எம். தங்கம்மாள்புரம் பகுதியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞரணி சாா்பில் மாணவா், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், வடக்... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை அலுவலகம் சாா்பில் வெளியி... மேலும் பார்க்க