செய்திகள் :

மணப்பாறையில் பலத்த சப்தம்; அதிா்வுகளால் பொதுமக்கள் அதிா்ச்சி

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமாா் 40 கி.மீ. தொலைவுக்கு கேட்ட பலத்த சப்தத்தால் பொருள்கள் மீது அதிா்வுகள் ஏற்பட்டன.

மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை முற்பகல் சுமாா் 11.20 மணியளவில் வெடி சப்தம்போல் பலத்த சப்தம் இரண்டு முறை கேட்டது. இந்த சப்தம் தெற்கே துவரங்குறிச்சி முதல் வடக்கே கொட்டப்பட்டு வரையிலும், கிழக்கே கோவில்பட்டி முதல் மேற்கில் கரூா் மாவட்டம் கடவூா் வரையிலும், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா், எரியோடு, வடமதுரை உள்ளிட்ட சுமாா் 40 கி.மீ. தொலைவுக்கு அதிா்வலைகளை ஏற்படுத்தியதாம்.

இதனால், சில வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்ணாடிகள் கதவுகள், பாத்திரங்கள், அலுவலக பயன்பாடு பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் மீதும் அதிா்வுகள் இருந்ததாக உணரப்பட்டுள்ளது.

கடந்த 2024, டிசம்பா் 10-ஆம் தேதி இதேபோல் பலத்த சப்தம் கேட்ட நிலையில், அதுகுறித்து இதுவரை அரசுத் தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்காத நிலையில், அவ்வப்போது கேட்டு வரும் பலத்த சப்தத்துக்கான காரணம் தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கி... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க