செய்திகள் :

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார்.

இவருக்கு அவரின் சகோதரர் நதீமும், அண்ணி சாய்தாவும் சேர்ந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சாய்தா தனது உறவுக்காரப் பெண் மந்தன்ஷா(20) என்பவரை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, அசிமை பெண் இருக்கும் பஷல்பூர் என்ற இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மந்தன்ஷாவின் புகைப்படத்தை அசிமிடம் காட்டினர்.

காவல்துறை

அவரும் போட்டோவை பார்த்து திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார். அங்குள்ள மசூதி ஒன்றில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மெளலானா திருமணச் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தார். அப்போது மெளலானா மணப்பெண்ணின் பெயரைத் தஹிரா என்று வாசித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அசிம் சந்தேகத்தில் மணப்பெண்ணின் முகத்தை மூடியிருந்த திரையை விலக்கி பார்த்தபோது மணமகள் மந்தன்ஷாவிற்குப் பதில் மந்தன்ஷாவின் தாயார் தஹிரா(45) மணமகளாக அமர்ந்திருந்தார். உடனே இதற்கு அசிம் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் மணமகளைத் திருமணம் செய்து அழைத்துச் செல்லவில்லையெனில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுப்போம் என்று அசிம் சகோதரரும், அண்ணியும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் மிரட்டியாத சொல்லப்படுகிறது.

அவர்கள் பிடியில் இருந்து தப்பித்து வந்த அசிம், இது குறித்து மீரட் போலீஸ் அதிகாரியைச் சந்தித்து மனு கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மீரட் எஸ்.எஸ்.பி விபின், ``புகார் பெறப்பட்டுள்ளது. விசாரணை நடந்து, அதன் பின்னர் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்” என்றார். மகளைக் காட்டிவிட்டு தாயைத் திருமணம் செய்து வைக்க நடந்த முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த கப்பல் மாலுமி கொலை

தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் மரடோனா. கப்பல் மாலுமியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கப்பலில் இருந்து விடுமுறைக்காக வந்தவர் வீட்ட... மேலும் பார்க்க

`போதைப்பொருள் சப்ளை, பாலியல் தொல்லை புகார்' - நடிகர் ஷைன் டோம் தாமஸ் சினிமாவில் நடிக்க தடை?

கேரள கொச்சி கலூரில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் விற்கும் கும்பல் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார். அதில் போதைப்பொரு... மேலும் பார்க்க

திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அ... மேலும் பார்க்க

மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; மருமகனைப் பாறாங்கல்லால் தாக்கி கொன்ற மாமனார்; என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர்- கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மூத்த மகள் சங்கீதா. இவருக்கும் நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு

கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகைது செய்ய... மேலும் பார்க்க