மணலபாடியில் சாலையின் நடுவே பள்ளம்: பொதுமக்கள் அவதி!
செஞ்சி வட்டம், மணலபாடி கிராமத்தில் பிரதான சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் சாலையைக் கடக்க முடியமால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செஞ்சி ஊராட்சி ஒன்றியம், மணலபாடி ஊராட்சியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மணலபாடி ஊருக்குள் செல்லும் மாரியம்மன் கோவில் பிரதான சாலையில் வடிகால் வாய்க்கால் குறுக்கே சிமென்ட் தளம் அமைக்கப்பட்டது.
தரமற்ற முறையில் கால்வாயின் மீது போடப்பட்ட சிமென்ட் தளத்தின் மையப் பகுதி இடிந்து விழுந்தது. 6 மாதங்களாகியும் இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், இந்தப் பகுதியைக் கடக்கும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனா். பள்ளி சிறுவன் ஒருவா் அண்மையில் பள்ளத்தில் விழுந்து காயமடைந்தாா்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.