செய்திகள் :

மணலைச் சாப்பிடுகிறோம்! இரக்கம் காட்டுங்கள்! - காஸா சிறுவனின் கண்ணீர் விடியோ!

post image

காஸாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் சிறுவன் பேசும் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது.

ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் காஸா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை வழங்கி வந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்தது. தற்போது குறிப்பிட்ட அளவு உணவு, மருந்துகளை மட்டுமே இஸ்ரேல் அனுமதிக்கும் நிலையில் அது அங்குள்ள மக்களுக்கு போதுமானதாக இல்லை. அதைவிட கொடூரமாக, உணவு மையங்களை நோக்கிச் செல்லும் மக்களை இஸ்ரேல் படையினர் சுட்டுத் தள்ளுகின்றனர். இதில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர். காஸாவில் உணவின்றி மக்கள் தவித்து வருவதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காஸாவில் உணவு கிடைக்காமல் தவிக்கும் ஒரு சிறுவன், உணவு வேண்டும் என்று கதறும் ஒரு விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் கண்கலங்கச் செய்துள்ளதுடன் உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விடியோவில் சிறுவன் பேசுகையில்,

"காஸாவில் நாங்கள் சாப்பிட உணவு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாளும் உணவு உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய டிரக்குகள் காஸாவுக்குள் வருகின்றன. ஆனால் அதில் எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

நாங்கள் உணவு இல்லாமல் மணலைச் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை. எங்குமே உணவு இல்லை. எங்களுக்கு உணவு சமைக்க மாவு தேவை. எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள். தயவுசெய்து கருணை காட்டுங்கள். எங்களிடம் உணவு இல்லை. நாங்கள் ரொட்டிக்கு பதிலாக மணலைச் சாப்பிடுகிறோம். கொஞ்சமாவது கருணை காட்டுங்கள்.

காஸாவில் தற்போது ஒரு ரொட்டி துண்டின் விலை 5.30 டாலர். அந்த ஒரு ரொட்டித் துண்டு மிகவும் சிறியது. அது எங்களுக்குப் போதவில்லை" என்று பேசியுள்ளார்.

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்காக வான்வழியைத் திறந்த ஈரான்!

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறி தாயகம் செல்ல, அந்நாடு பிரத்யேகமாக தனது வான்வழியைத் திறந்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையில் போர் தொடங்கியுள்ள நிலையில், இருநாடுகளும் த... மேலும் பார்க்க

ஈரானுக்காக ஒருநாளுக்கு ரூ. 8,600 கோடி செலவிடும் இஸ்ரேல்!

ஈரான் மீதான போரில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையேயான போரில் அமெரிக்காவும் களமிறங்கும் சூழல் ஏற்படும் அளவுக்கு போர் பெரிதாகி ... மேலும் பார்க்க

கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்

கனடாவில் இந்திய மாணவி மர்மமான முறையில் பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்யா தியாகி என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவி உயர் படிப்புக்காக கனடாவுக்குச் சென்றிருந்தார். இவர் கடந்த ஜூன் 17ஆம் த... மேலும் பார்க்க

கிரீஸ்: 2 மீன்பிடி படகுகளில் வந்த 600 அகதிகள் மீட்பு!

கிரீஸ் நாட்டின் தென்கடல் பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட அகதிகளை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர். கிரீஸின் தெற்குப் பகுதியிலுள்ள கவ்டோஸ் தீவின் கடல்பகுதியி... மேலும் பார்க்க

ஈரானையே உலுக்கிய இஸ்ரேலின் பெண் உளவாளி! தடயமே இல்லாமல் மாயமான கதை!!

பல ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போலத்தான் ஈரானிலும் நடந்தது. ஈரானுக்குள் நுழைந்து முக்கிய தலைவர்கள், உயர் அதிகாரிகளின் வீட்டுக்குள் நுழைந்த இஸ்ரேலின் பெண் உளவாளி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இஸ்ரேல்... மேலும் பார்க்க

நைஜர்: துப்பாக்கிச் சூட்டில் 34 வீரர்கள் கொலை! ராணுவம் தேடுதல் வேட்டை!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், ஆயுதம் ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 34 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.நைஜரின் மேற்குப் பகுதியில், மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய நாடுகளுடனான பகுதியில் ... மேலும் பார்க்க