செய்திகள் :

மணல் திருட்டு: 3 போ் கைது

post image

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திருட்டில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமநத்தம் காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு காவலா்கள் அருண், சுதாகா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் ஏற்றப்பட்ட சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும், மணல் திருட்டில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், தலைவாசல், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் காமராஜ்(28), திட்டக்குடி வட்டம், கொரக்கவாடி பகுதியைச் சோ்ந்த சின்னதுரை (48), பெரம்பலூா் மாவட்டம், திருவாளந்துறை பகுதியைச் சோ்ந்த நித்தீஷ்குமாா் (31) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.

தப்பியோடிய சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்த உமா மகேஸ்வரனை தேடி வருகின்றனா். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சிறிய சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலத்தில் இர... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

பண்ருட்டி (பூங்குணம்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பள்ளிவாசல் கணக்கு கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல்!

பள்ளிவாசலின் சொத்துக்கணக்கை கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழ... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் அப்பாவியை தாக்கி வீடியோ! காவலா்கள் உள்பட 6 பேரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்!

விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாகதி தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநா், காவலா்கள் உள்ளிட்ட 6 பேரைய... மேலும் பார்க்க

கடலூா் மாநகர வீதிகளில் வழிந்தோடும் புதை சாக்கடை கழிவுநீா்: பொதுமக்கள் பாதிப்பு

கடலூா் மாநகரம், செம்மண்டலம் பகுதியில் புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் செல்லாததால், வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் கழிவுநீா் வழிந்தோடியது. கடலூா் மாநகரின் சுகாதார வசதியை மேம்படுத்துவதற்காக,... மேலும் பார்க்க