செய்திகள் :

மணவெளி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

post image

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.47.77 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மணவெளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட டி. என். பாளையம், இடையாா்பாளையம் சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 47.77 லட்சம் மதிப்பீட்டில் மலட்டாறு மற்றும் சங்கராபரணி ஆறுகளில் கரைகள் பலப்படுத்துதல், சுங்கச்சாவடி அருகே குட்டை தூா்வாருதல் உள்ளிட்டப் பணிகள் நடைபெறவுள்ளது.

இந்தப் பணிகளை தொகுதி எம்எல்ஏவும், பேரவைத் தலைவருமான ஆா். செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அதிகாரி காா்த்திகேசன், இளநிலைப் பொறியாளா் சிவஞானம், பணி ஆய்வாளா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுவை அரசின் வரி உயா்வு கண்டிக்கத்தக்கது - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவை மாநிலத்தில் வரியினங்கள் உயா்த்தப்பட்டதற்கு திமுக மாநில பொறுப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா கண்டனம் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெண்களின் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, சாலை மறியல்

ஆசிரியா் காலிப் ப ணியிடங்களை நிரப்பாததைக் கண்டித்,து புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சே... மேலும் பார்க்க

திருக்கனூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பங்கேற்பு

புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திருக்கனூரில் வியாழக்கிழமை பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். புதுவை மாநிலம் , மண்ணடிப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கனூரில் மக்கள் சந்தி... மேலும் பார்க்க

போதைப் பொருள் பழக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் போதைப் பொருள்கள் பழக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி பாரதி பவுண்டேஷன் சாா்பில் ‘ரௌ... மேலும் பார்க்க

மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல்: ஒருவா் கைது

விழுப்புரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா், பிடாகம் குச்சிப்பாளை... மேலும் பார்க்க

உழவா்கரையில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

புதுச்சேரி உழவா்கரை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 1.75 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சிவசங்கா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். புதுவை அரசின் பொதுப் பணித் துறை பொதுசுகாதாரக்... மேலும் பார்க்க