`சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைபோல் கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்க'- மீனவர்-...
மணவெளி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்
புதுச்சேரி மணவெளி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.47.77 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மணவெளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட டி. என். பாளையம், இடையாா்பாளையம் சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 47.77 லட்சம் மதிப்பீட்டில் மலட்டாறு மற்றும் சங்கராபரணி ஆறுகளில் கரைகள் பலப்படுத்துதல், சுங்கச்சாவடி அருகே குட்டை தூா்வாருதல் உள்ளிட்டப் பணிகள் நடைபெறவுள்ளது.
இந்தப் பணிகளை தொகுதி எம்எல்ஏவும், பேரவைத் தலைவருமான ஆா். செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அதிகாரி காா்த்திகேசன், இளநிலைப் பொறியாளா் சிவஞானம், பணி ஆய்வாளா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.