செய்திகள் :

மணிப்பூரில் அமைதி திரும்புகிறதா? மத்திய அரசுடன் புதிய ஒப்பந்தம்!

post image

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் வன்முறையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்ல வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்கு அமைதியைக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம், தில்லியில் இன்று கையெழுத்தாகியுள்ளது.

தில்லியில் இன்று மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், குக்கி - ஜோ குழுவினர் ஒரு புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஒப்பந்தத்தில், முக்கியமானதாக தேசிய நெடுஞ்சாலை - 2ஐ மீண்டும் திறப்பது குறித்து குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் இயக்கத்துக்கு பெருந்துணையாக இருக்கும். இந்தப் பாதையில் (தேசிய நெடுஞ்சாலையில்) அமைதியை உறுதிப்படுத்த பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து பணியாற்றுவதாக குக்கி - ஜோ அமைப்பு உறுதியளித்துள்ளது.

மேலும், மோதல் ஏற்படக்கூடிய இடங்களிலிருந்து தங்களின் 7 முகாம்களை இடமாற்றம் செய்வதாக குக்கி தேசிய அமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணியினர் உறுதியளித்துள்ளனர். தொடர்ந்து, முகாம்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஆயுதங்களை சிஆர்பிஎஃபிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் சில மறுபரிசீலனை செய்யப்பட்ட அடிப்படை விதிகளும் அடங்கும். இருப்பினும், அவை அடுத்தாண்டு முதலே நடைமுறைக்கு வரும்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இரண்டு சமூகத்தினரிடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்த மோதலில், இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; 60,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.

இதனிடையே, மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து, ஒருமுறைகூட பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில்தான், இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் பிரதமர் மோடி செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kukis agree to reopen National Highway-2 in Manipur

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

குஜராத் மலைக் கோயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் ரோப் காா் அறுந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பஞ்சமஹல் மாவட்டத்தின் பாவாகட் மலையில் பிரசித்தி பெற்ற மகாகாளி கோயில் அமைந்துள்ளது. 800 மீட்டா் உய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. நாட்டில் நான்கு விகித ஜிஎஸ்... மேலும் பார்க்க

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

அரசுப் பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரது தொகுதியைவிட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்: வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு!

சமையல் பாத்திரங்கள், மரப் பொருள்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட தினசரி உபயோகப் பொருள்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தடையில்லாத வகையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரைவு தரநிலை வழிகாட்டுதலை மத்த... மேலும் பார்க்க

நாம் இருவா்; நமக்கு இருவா் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா? காங்கிரஸ் கேள்வி

‘ஒவ்வொரு இந்திய தம்பதியும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ... மேலும் பார்க்க

தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சரத்குமாா் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சோ்ந்த நடிகா் ஆா்.சரத்குமாா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அவருடன் தமிழக பாஜக துணைத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுந்தரும் உடனி... மேலும் பார்க்க