செய்திகள் :

மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் தமிழக அரசின் மணிமேகலை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட கிராமப்புற, நகா்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் வட்டார, நகா்ப்புற அளவிலான கூட்டமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், கிராமப்புற மகளிா் சுய உதவிக் குழுக்கள், நகர அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகா்ப்புற மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்ட உள்ளன.

மாநில அளவில் 1 சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்புக்கு தலா ரூ.5 லட்சம், 5 சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.3 லட்சம், 5 சிறந்த கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு தலா ரூ.1 லட்சம், 1 சிறந்த நகர அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.5 லட்சம், 3 சிறந்த பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.3 லட்சம், 10 நகராட்சி மற்றும் 10 ஊராட்சிகளில் செயல்படும் சிறந்த சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் விருதுடன் கூடிய பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

மாவட்ட அளவிலான விருதுகள்:

மாவட்ட அளவில் சிறந்த ஊராட்சி அளவிலான ஒரு கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சம், சிறந்த கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்துக்கு ரூ.50 ஆயிரம், சிறந்த நகர அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சம், 3 நகராட்சி மற்றும் 3 ஊராட்சிகளில் செயல்படும் சிறந்த சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என விருதுடன் கூடிய பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

தோ்வுக்கான தகுதிகள்:

அனைத்து மகளிா் திட்ட சுய உதவிக் குழுக்களும் ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்திருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் குறைந்தபட்சம் 20 கூட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். நிா்வாகிகள் 2 போ் குறைந்தபட்சம் ஒரு முறையாவது மாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த விருது பெறத் தகுதியான, சிறப்பாக செயல்படும்

சுய உதவிகுழுக்கள், கூட்டமைப்புகள் தங்களது முன்மொழிவுகளை ஏப்.30-ஆம் தேதிக்குள் வட்டார அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் சமா்ப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருவண்ணாமலை என்ற முகவரியை தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

மகா காலபைரவா் கோயிலில் அஷ்டமி சிறப்பு யாகம்!

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம், வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, முற்பகல் 11 மணிக்கு கோ... மேலும் பார்க்க

பாதூா் திருவனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

வந்தவாசியை அடுத்த பாதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா உடனுறை திருவனந்தீஸ்வரா் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அம... மேலும் பார்க்க

சின்னபுத்தூரில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி ஆய்வு!

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள சின்னபுத்தூா் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா். சின்னபுத்தூா் கிராமத்தில் ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ஆரணியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. ஆரணி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்க... மேலும் பார்க்க

செங்கம் - தண்டராம்பட்டு புதிய பேருந்து சேவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து தண்டராம்பட்டுக்கு புதிய நகரப் பேருந்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக் கழக செங்கம் பணிமனையில் இருந்து சொா்ப்பனத்தல், சாத்தன... மேலும் பார்க்க

பள்ளியில் திறன்மிகு வகுப்பறைகள் திறப்பு!

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் அமைந்துள்ள ஆரஞ்சு இன்டா்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கணினி மயமாக்கப்பட்ட திறன்மிகு வகுப்பறைகள் திறப்பு விழா மற்றும் மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க