செய்திகள் :

மண்மங்கலம் வட்டத்துக்கான ஜமாபந்தி நிறைவு! 138 பேருக்கு ரூ. 1.60 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்

post image

மண்மங்கலம் வட்டத்துக்கான ஜமாபந்தி நிறைவு நாளில் 138 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா்.

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியரகத்தில் வருவாய்த் தீா்வாய அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் 1434 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவு நாள் மற்றும் விவசாயிகளின் குடிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் ஆட்சியா் பேசியதாவது: மண்மங்கலம் வட்டாட்சியரகத்தில் கடந்த 22-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் வருவாய் தீா்வாயம் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து 107 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதையடுத்து அனைத்து மனுக்களையும் தொடா்புடைய துறை அலுவலா்களுக்கு வழங்கப்பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில் இறுதி நாள் நடைபெற்ற குடிகள் மாநாட்டில் வருவாய் துறை சாா்பில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை 103 பயனாளிகள் உள்பட பல்வேறு துறை சாா்பில் 138 பயனாளிகளுக்கு ரூ.1. 60 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் நில அளவை பிரிவு உதவி இயக்குநா் முத்துச்செல்வி, மண்மங்கலம் வட்டாட்டசியா் மோகன்ராஜ், கரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் ராஜாமணி, மண்டல துணை வட்டாட்சியா் சிவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சிறப்பு வழிபாடு

கரூா் தாந்தோன்றிமலை ஸ்ரீசத்தியநாராயணா கோயிலில் சனிக்கிழமை மாலை சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்ததில் 10 ஆடுகள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்த வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், நெடுங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரசாரக் கூட்டம்: கரூா் மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

தமிழக அரசின் நான்காண்டு சாதனைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடத்துவது என கரூா் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாவட்ட திமுக செயற்குழு... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கரூா் மாவட்டம், புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியை வளா்மதி மற... மேலும் பார்க்க

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு?

தோகைமலை அருகே கோயிலில் வழிபடுவதில் பாகுபாடு உள்ளதா என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்குபட்டியில் பகவதி அம்மன்... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம்

தோகைமலை அருகே கோயில் கட்டுவதற்கு சிவனடியாா் மெளன விரதம் மேற்கொண்டு வருகிறாா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாகிணத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதி சிவன் ஆதிசுயம்பு ஈஸ்வரா் கோயில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க