செய்திகள் :

`மதிக்க முடியாவிட்டால், விலகி இருங்கள்' - ஷூ அணிந்து யாகத்தில் கலந்துகொண்ட லாலு; கிளம்பிய எதிர்ப்பு

post image

பீகார் முன்னாள் முதல்வர், பல ஊழல் வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்று இப்போது ஜாமீனில் இருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். இப்போது அவர் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் ஆன்மிக யாகம் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த யாகத்தில் லாலு பிரசாத் யாதவ் முறைப்படி அமராமல் ஷோபா மீது அமர்ந்தபடி யாகத்தில் கலந்து கொண்டார். அதோடு ஷோபாவில் இருந்தபோது காலில் ஷூ அணிந்தபடி இருந்தார். ஷோபாவில் அமர்ந்தபடி யாக குண்டத்தில் ஹோமத்திற்கான பொருட்களை லாலு பிரசாத் யாதவ் போட்டார். அவரின் இச்செயல் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

லாலு பிரசாத் யாதவ் ஷூ அணிந்து கொண்டு யாகத்தில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி இருக்கிறது. இதனால் லாலு பிரசாத் யாதவ் இந்து மத சடங்குகளை அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நெட்டிசன்கள் இணையத்தில் லாலு பிரசாத் யாதவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சின்ஹா என்பவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''ஷூ அணிந்தபடி ஹோம குண்டத்தில் பொருட்களை வீசுவது கேவலமான செயல். எங்கள் சடங்குகளை உங்களால் மதிக்க முடியாவிட்டால், அவற்றை விட்டு விலகி இருங்கள். பொதுமக்களை முட்டாளாக்குவதற்காகவும், போட்டோ எடுப்பதற்காகவும் இதைச் செய்வதை நிறுத்துங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில்.''இந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் அகிலேஷ்-லாலுவின் அரசியல் இதுதான்.

யாகத்தின் போது லாலு யாதவ் காலணி அணிந்து அமர்ந்திருக்கிறார். இது அலட்சியம் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகள் மீதான தாக்குதல். அகிலேஷ் யாதவைப் பாருங்கள், கோவில், மதம் என்ற பேச்சு வந்தவுடன் முகம் சுழிக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

``புதினிடம் பேசினேன்; புதின்-ஜெலன்ஸ்கி சந்திப்பு நடக்க உள்ளது! அது எங்கே?'' - ட்ரம்ப்

கடந்த 15-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு நடந்தது. சிறப்பான சந்திப்பு இதையொட்டி நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்ரம்பை சந்தித்தார். கடந்த பிப்ரவரி மாதமும், ட்ரம்ப் - ஜெல... மேலும் பார்க்க

"கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சிப்பதற்கு ஒரு தகுதி உண்டு... அது எடப்பாடிக்கு இல்லை" - முத்தரசன் பேச்சு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாட்டையொட்டி சேலம் போஸ் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், "தமிழகம் எந்த திசையில் செல்ல வ... மேலும் பார்க்க

`எடைக்கு எடை புது நாணயம்; தடபுடல் ஊர்வலம்' - மக்கள் அன்பில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நெகிழ்ச்சி!

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ளது தாணிக்கோட்டகம் கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் பணியாற்றினார். இவர் ஓய்வு பெற்ற நிலையில் தாணிக்கோட்டகம் கிராமத்த... மேலும் பார்க்க

நகர மன்றத் தலைவர் தேர்தலில் வெற்றி; சங்கரன்கோவில் நகராட்சியை மீண்டும் கைப்பற்றிய திமுக!

சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும். சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்றத் தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக-விலிருந்து 9 உற... மேலும் பார்க்க