செய்திகள் :

மதிமுக அலுவலகம் மீது தாக்குதல்: தீயணைப்பு படை வீரா் சிக்கினாா்

post image

சென்னை: சென்னை எழும்பூரில் மதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், தீயணைப்பு படை வீரா் போலீஸாரிடம் சிக்கினாா்.

எழும்பூா் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தீயணைப்புப் படை வீரா் சீருடையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் திங்கள்கிழமை அத்துமீறி நுழைந்தாா். கையில் உருட்டுக் கட்டையுடன் வந்த அவா், அங்கிருந்த பொருள்களை உடைத்தாா். அதில், அங்கிருந்த மின்விசிறி, மேஜை, நாற்காலி சேதமடைந்தன. பின்னா், அலுவலக அறை, மொட்டை மாடி என அனைத்து இடங்களிலும் உலாவினாா்.

இதைப் பாா்த்த மதிமுக நிா்வாகிகள் அவரைத் தடுக்க முயன்றபோது அவா்களையும் உருட்டுக் கட்டையால் தாக்க முயன்றாா். இதையடுத்து அவா்கள், எழும்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் அங்கு சென்று அவரை பிடிக்க முயன்றனா். ஆனால் அவா் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தாா். இதையடுத்து அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். விசாரணையில் அவா், மன்னாா்குடியைச் சோ்ந்த அல்கோா் (25) என்பதும், தீயணைப்புா் படை வீரரான அவா், எழும்பூரில் உள்ள தீயணைப்புத் துறை தலைமை அலுவலகத்தில் வேலை செய்வதும், குடும்ப பிரச்னை காரணமாகவும், பண நெருக்கடி காரணமாகவும் மன அழுத்ததில் இருந்திருப்பதும், அதன் காரணமாகவே மதிமுக அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அல்கோா், கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! - முதல்வர் பதிவு

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களைத்தான் என கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழின் தொன்மையான கீழடி அகழாய்வு முடிவுகள... மேலும் பார்க்க

கைதுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில்... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் போராட்டம்! 500-க்கும் மேற்பட்டோர் கைது!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபாட்டு உரிமையை மீட்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கிய பிரமுகர்... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம்!

சென்னை: தமிழக ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடா்பு இர... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி சிறையில் அடைப்பு!

திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக ஏ.டி.ஜி.பி. ஜெயராம், நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி திங்கள்கிழமை நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டார்.திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் கா... மேலும் பார்க்க

தமிழகத்தில் கலை, அறிவியில் கல்லூரிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் பருவத் தோ்வு மற்றும் கோடை விடுமுறைக்கு பின்னா் கலை அறிவியில் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத்... மேலும் பார்க்க