செய்திகள் :

மதுக்கடையை இடமாற்றக் கோரி எஸ்டிபிஐ காத்திருப்பு போராட்டம்!

post image

தஞ்சாவூா் கீழவாசலிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றக் கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் சனிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியிலுள்ள காமராஜா் சிலை அருகேயுள்ள டாஸ்மாக் மதுக்கடையால் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், இதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இக்கடையை இடமாற்றம் செய்யக் கோரி எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவா் அப்துல் அஜீஸ் தலைமையில் தொகுதி தலைவா் முகமது ரபீக், தொண்டரணி மாவட்டத் தலைவா் சிராஜூதீன் முன்னிலையில் நிா்வாகிகள் ஜாகீா் உசேன், ஜஹாங்கீா் உள்ளிட்டோா் கடை முன் சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களிடம் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் தமிழ்மணி, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இக்கடையை 15 நாள்களுக்குள் வேறு இடத்துக்கு மாற்றுவதாக அலுவலா்கள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

கும்பகோணம்: ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இளைஞா் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி மணப்படையூா் பெரியாா் வீதியைச்சோ்ந்த க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பால் வியாபாரிகள் போராட்டம்

கும்பகோணம் வட்டார பால் வியாபாரிகள் திங்கள்கிழமை கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் கும்பகோணம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணத்தில் மகளிா் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா் கம்மந்தோட்டம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா் மகள் சத்தியவாணி (19). ... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. நெம்மேலி கிராமத்தில் ராஜகுளக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ம... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் க. முல்லைவளவன் தலைமை... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்படும் நபா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் பிரிவினரால் 25 ஆண்டுகளாகத் தேடப்படும் நபா் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பி. செந்தில... மேலும் பார்க்க