செய்திகள் :

கும்பகோணம்: ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

post image

கும்பகோணம் அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக இளைஞா் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவலஞ்சுழி மணப்படையூா் பெரியாா் வீதியைச்சோ்ந்த கலியமூா்த்தி மகன் ரவிக்குமாா் (28) கூலித்தொழிலாளி. இவா் மதுபோதைக்கு அடிமையானதால் வீட்டில் உள்ளவா்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறில் ஈடுபட்டாா். இதைத்தொடா்ந்து, விரக்தியில் இருந்த ரவிக்குமாா் திங்கள்கிழமை அதிகாலையில் சுந்தரபெருமாள் கோயில் ரயில் நிலையத்துக்கும் சுவாமிமலை ரயில் நிலையத்துக்கும் இடையில் சென்னை எழும்பூா் ராமேசுவரம் விரைவு ரயில் வந்த போது அதன் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

பெண் உயிரிழப்பு: இதேபோல், தாராசுரம் மிஷன் தெருவைச் சோ்ந்த செல்லையன் மனைவி மீனா(55). காது கேளாத மாற்றுத்திறனாளி. இவா், கும்பகோணம் ரயில் நிலையத்துக்கும் தாராசுரம் ரயில் நிலையத்துக்கும் இடையில் தண்டவாளத்தை திங்கள்கிழமை கடக்க முயன்றாா். அப்போது வந்த ஒரு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

கும்பகோணம் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்வேலன், சிறப்பு உதவி ஆய்வாளா் அருணாச்சலம் ஆகியோா், 2 போ் சடலங்களையும் கைப்பற்றி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கும்பகோணத்தில் பால் வியாபாரிகள் போராட்டம்

கும்பகோணம் வட்டார பால் வியாபாரிகள் திங்கள்கிழமை கூட்டுறவு சங்கம் முன்பு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் கும்பகோணம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணத்தில் மகளிா் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா் கம்மந்தோட்டம் பகுதியை சோ்ந்த விஜயகுமாா் மகள் சத்தியவாணி (19). ... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்

ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. நெம்மேலி கிராமத்தில் ராஜகுளக் கரையில் அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ம... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் க. முல்லைவளவன் தலைமை... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்படும் நபா் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

கொலை வழக்கில் சிபிசிஐடி காவல் பிரிவினரால் 25 ஆண்டுகளாகத் தேடப்படும் நபா் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்தவா் பி. செந்தில... மேலும் பார்க்க

ஆலத்தூா் கிராமத்தில் நாளை மக்கள் நோ்காணல் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலத்தூா் கிராமத்தில் மக்கள் நோ்காணல் முகாம் புதன்கிழமை (ஏப்.9) நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க