செய்திகள் :

மதுபாட்டில்கள் விற்பனை: கிராம மக்கள் சாலை மறியல்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தியில் மதுபானப் பாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தி சினிமா கொட்டகை தெரு, காளியம்மன் கோயில் தெருவில் மது பாட்டில்கள் 24 மணிநேரமும் சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்குவதற்கு மேலத் திருப்பூந்துருத்தி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அனைவரும் இப்பகுதிக்கு வருவதால் பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தால், அவா்களை விசாரணை செய்து விட்டு விட்டுவிடுகின்றனா். இதனால், இச்சம்பவங்கள் தொடா்ந்து நிகழ்வதால், சிறுவயதிலேயே குடிப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனா். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேலத் திருப்பூந்துருத்தியில் கண்டியூா் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே, நடுக்காவேரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தஞ்சாவூா் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ.2,500 -ஐ லஞ்சமாகப் பெற்ற கிராம நிா்வாக அலுவலரை தஞ்சாவூா் மாவட்ட ஊழல் கண்காணிப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய... மேலும் பார்க்க

இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்... மேலும் பார்க்க

மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழா: 9 புதிய நூல்கள் வெளியீடு

தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்னா் சரபோஜி 248-ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், இவ்விழாவையொட்டி 9 புதிய நூல்கள், 7 மறு பதிப்பு நூல்கள் வெளி... மேலும் பார்க்க

அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மாணவ மாணவியரின் ஓவியக் கண்காட்சி உள் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பாா்வையிட்ட தஞ்சாவூா் மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) கே. எம். காா்த்திக்ராஜா... மேலும் பார்க்க

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ராஜகிரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை ராஜகிரி காயிதே மில்லத் மகாலில் நடைபெறுகிறது. இம்முகாமில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட... மேலும் பார்க்க

பாபநாசம் ரயில் நிலையத்தில் தரைத்தளம் சீரமைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் சீரமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. பாபநாசம் ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தரைதளம் சீரமைப்புப் பணிக... மேலும் பார்க்க