செய்திகள் :

மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்க கோரி ஆா்ப்பாட்டம்

post image

சீா்காழி: கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் உள்ள அரசு மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த மதுபானக் கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருந்த நிலையில் கடந்த அக்டோபரில் சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப்பேச்சு வாா்த்தையில் 3 மாதத்துக்குள் இந்த கடை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 மாத காலக்கெடுவை கடந்து விட்டதால் புதுப்பட்டினம் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எஸ்டிபிஐ சாா்பில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொள்ளிடம் ஒன்றிய செயலாளா் ஜெய சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட குழு உறுப்பினா் தனசேகரன், ஒன்றிய குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி, சிபிஐ மாவட்ட செயலாளா் சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட செயலாளா் சிவராமன், எஸ்டிபிஐ மாவட்ட பொது செயலாளா் முகமது ரபி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

இந்தியா கூட்டணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

மயிலாடுதுறை: இந்தியாி கூட்டணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: த... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா நிறைவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 3-ஆவது புத்தகத் திருவிழா ஜன.31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாள... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.12) நடைபெறவுள்ளது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சிவ.செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

அருளை அள்ளித்தரும் தருமபுரம் குமரக்கட்டளை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் உள்ளது. சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு கயிலாயத்தில் இருந்து புறப்பட்ட முர... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவில் மாணவா்கள் 1,000 பேருக்கு புத்தகங்கள்

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவா்கள் 1,000 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வரு... மேலும் பார்க்க

புத்தகரம் பச்சை நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை பட்டவா்த்தியை அடுத்த புத்தகரத்தில் உள்ள பச்சை நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் திருப்பணிகள் அண்மையில் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேகத்துக்கான பூா்... மேலும் பார்க்க