செய்திகள் :

மதுரை: கஞ்சா போதையில் அட்டகாசம்; ஆயுதங்களுடன் கும்பல் வலம்; கார், பைக், கடைகளை உடைத்து ரகளை

post image

மதுரை மாநகரப் பகுதியிலுள்ள வண்டியூர், சௌராஷ்டிராபுரத்தில் கடந்த 10 ஆம் தேதி இரவு கஞ்சா போதையில் கையில் வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற ரவுடிக் கும்பல் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளது.

கைது
கைது

அதுமட்டுமின்றி சாலையில் சென்ற பொதுமக்களை ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதோடு சாலையோரம் நின்ற கார், பைக்குகளைக் கீழே தள்ளி அடித்து உடைத்து நொறுக்கியுள்ளனர்.

அந்தப் பகுதியில் உள்ள கடைகளை அடைக்கச் சொல்லி கடைக்காரர்களை மிரட்டியும், அடித்தும் உள்ளனர்.

கஞ்சா போதை ரௌடிகள்
கஞ்சா போதை ரௌடிகள்

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டு தப்பியோடிய ஹம்சாத் ஹுசைன் (22), மருதுபாண்டி (24), லட்சுமணன் (22), அருண் (22) சந்தோஷ் ஆகிய ஐவரையும் கைது செய்து, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அட்ராசிட்டி செய்த மேலும் 5 நபர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

விருதுநகர்: தீயணைப்புத் துறையினர் Gpay-ல் தீபாவளி வசூல்; லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியது எப்படி?

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் தீபாவளி வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத் து... மேலும் பார்க்க

"ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்" - இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தற்கொலை செய்த இளைஞர்

கேரள மாநிலம் கோட்டையம் தம்பலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அனந்து அஜி(24). இவர் திருவனந்தபுரத்தில் கடந்த 9-ம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யும் முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில... மேலும் பார்க்க

திண்டுக்கல் : சாதி மாறி திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை - பெண்ணின் தந்தை கைது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). பால் கறவை தொழில் செய்து வருகிறார்.கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவ... மேலும் பார்க்க

பள்ளி கழிவறையில் பதுங்கி இருந்து 7 வயது மாணவி பாலியல் வன்கொடுமை - ராஜஸ்தானில் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 7 வயது பள்ளி மாணவி கழிவறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அம்மாணவி கழிவறைக்கு சென்றபோது அங்கு மறைந்திருந்த நபர் மாணவியை பாலியல் வன்... மேலும் பார்க்க

விளையாட்டாக கேபிளை இழுத்த சிறுவன்; ட்ரில்லிங் மெஷின் நெற்றியில் துளைத்து பலி - கேரளாவில் சோகம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் மேற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மூத்த மகன் துருவ் நாத்துக்கு இரண்டரை வயது ஆகிறது. ... மேலும் பார்க்க

நாமக்கல்: கிட்னி விற்பனையில் ஈடுபட்ட 2 புரோக்கர்கள் கைது; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனை செய்து வந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வி... மேலும் பார்க்க