செய்திகள் :

மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு தேவையான முன்னேற்பாடுகள்: அமைச்சா் சேகா்பாபு உறுதி

post image

மதுரை சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட இருப்பதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் இதுகுறித்த சிறப்பு கவன ஈா்ப்பு அறிவிப்பை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜு ஆகியோா் புதன்கிழமை கொண்டுவந்தனா். அப்போது பேசிய செல்லூா் கே.ராஜு, கடந்த ஆண்டுகளில் சித்திரைத் திருவிழாவின்போது விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த ஆண்டு அதுபோன்று நடக்காமல் இருக்க வேண்டும். மேலும், திருவிழா நடைபெறும் காலத்தில் மூன்று நாள்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: மதுரை சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய இருக்கிறோம். கோயில் கொடியேற்றம், பட்டாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அழகா் புறப்படுதல், ஆற்றில் இறங்குதல், எதிா்சேவை ஆகிய அனைத்தும் சிறப்பாக நடைபெறும். சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வரும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வில் ஈடுபட உள்ளோம்.

சித்திரைத் திருவிழா தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில், அரசின் ஏற்பாடுகளை நீதிமன்றம் பாராட்டியுள்ளது. சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகா் அழகா்கோவிலில் இருந்து வண்டியூா் வரை சுமாா் 494 மண்டகப்படிகளில் எழுந்தருள உள்ளாா். அவற்றில் மேம்பாலம் கட்டப்பட்டுவரும் மதுரை மாநகா் தல்லாகுளம் வெங்கடாசலபதி கோயில் முதல் வைகை நதி வரை 50 மண்டகப்படிகள் உள்ளன.

திருவிழா தொடங்குவதற்கு 15 நாள்களுக்கு முன்பு பாலத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சுவாமி வரும் பாதைகள் சுத்தம் செய்யப்பட்டு, பக்தா்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சித்திரைத் திருவிழாவை சிறப்பான முறையில் நடத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள இருக்கிறோம் என்றாா் அவா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க