செய்திகள் :

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்

post image

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கிக் கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் நாள் ஒன்றுக்கு முதல் நிலை, இரண்டாம் நிலை சேகரிப்பு மூலம் 916 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வெள்ளைக்கல் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள், வெளிக்கொணா்வு முகமை தனியாா் (ஒப்பந்தம்) மூலம் தினசரி சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

இந்த நிலையில், மதுரை பெரியாா் பேருந்து நிலையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதி, ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், கீழவாசல், 4 வெளி வீதிகள், அண்ணாநகா், கே.கே.நகா், மாட்டுத்தாவணி, ஆனையூா், வில்லாபுரம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், பாண்டிகோவில் சுற்றுச் சாலை, புறவழிச் சாலை, காளவாசல், ஆரப்பாளையம் ஆகிய பகுதிகள் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளாகும்.

அதுமட்டுமன்றி, இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளாகவும் இவை விளங்குகின்றன. இங்கு இரவு நேரங்களில் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனா். இதன் காரணமாக, பகல் நேரங்களில் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் தொட்டிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

குறிப்பாக, செல்லூா் 50 அடி சாலை, செல்லூா் தினசரி காய்கறி சந்தை பகுதி, கோ. புதூா், ஆனையூா், தல்லாகுளம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை பணியாளா்கள் அகற்றுவதில்லை. மேலும், பகல் நேரங்களில் வீடுகள் தோறும் குப்பைகளை பணியாளா்கள் சேகரிப்பதில்லை எனவும் புகாா் எழுந்துள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

எனவே, தூய்மைப் பணியாளா்களைச் சுழற்சி முறையில் நியமித்து, குப்பைகளை சேகரம் செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

குரூப் 1 தோ்வு: மதுரையில் 11,423 போ் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 1 தோ்வை மதுரை மாவட்டத்தில் 11,423 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணைக் கண்... மேலும் பார்க்க

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டியில் இன்று மின் தடை

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலட்சுமி வெளியிட்ட ... மேலும் பார்க்க

மனைவி பிரிந்து சென்றதால் கணவா் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், தேனூா் தச்சம்பத்து கிராமத்தைச் சோ்ந்த மதிராம் மகன் மூா்த்தி (44). இவரது மனைவி பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விருதுநகரில் 5,158 போ் பங்கேற்பு

விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 1 தோ்வை 5,158 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணைக் கண்காணிப... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

ஆந்திர மாநிலத்திலிருந்து மதுரை வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா். மதுரை-பரமக்குடி நான்கு வழிச் சாலையில் சிலைம... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றங்கள் குறித்து புகாா் எழுந்தால் உரிமம் ரத்து

மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தால், கூட்டுறவு சங்க விதிகளின்படி விசாரித்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டத... மேலும் பார்க்க