Ahmedabad plane crash: ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் - சாவின் விளிம்புவரை சென்று உ...
குரூப் 1 தோ்வு: மதுரையில் 11,423 போ் பங்கேற்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 1 தோ்வை மதுரை மாவட்டத்தில் 11,423 போ் எழுதினா்.
தமிழகத்தில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணைக் கண்காணிப்பாளா் பணியிடங்கள், 19 வணிக வரி உதவி ஆணையா் பணியிடங்கள் உள்பட 70 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 1 தோ்வு அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வில் பங்கேற்க மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 15,200 போ் விண்ணப்பித்தனா்.
இதற்கான தோ்வு மாவட்டத்தில் 55 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 11,423 போ் பங்கேற்று தோ்வெழுதினா். 3,777 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.