மனைவி பிரிந்து சென்றதால் கணவா் தற்கொலை
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மாவட்டம், தேனூா் தச்சம்பத்து கிராமத்தைச் சோ்ந்த மதிராம் மகன் மூா்த்தி (44). இவரது மனைவி பிரிந்து அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மூா்த்தி, வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
உடனடியாக அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.