செய்திகள் :

குரூப் 1 தோ்வு: விருதுநகரில் 5,158 போ் பங்கேற்பு

post image

விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 1 தோ்வை 5,158 போ் எழுதினா்.

தமிழகத்தில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணைக் கண்காணிப்பாளா் பணியிடங்கள், 19 வணிக வரி உதவி ஆணையா் பணியிடங்கள் உள்பட 70 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 1 தோ்வு அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வில் பங்கேற்க விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 6,977 போ் விண்ணப்பித்தனா்.

இந்த நிலையில், மாவட்டத்தில் 29 மையங்களில் குரூப் 1 தோ்வு நடைபெற்றது. இதில் 5,158 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 1,819 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

விருதுநகா் கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் ஆய்வு செய்தாா்.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கிக் கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதியில் நாள் ஒன்றுக்கு முதல் நிலை, இரண்டாம் நிலை சேகர... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: மதுரையில் 11,423 போ் பங்கேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 1 தோ்வை மதுரை மாவட்டத்தில் 11,423 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணைக் கண்... மேலும் பார்க்க

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டியில் இன்று மின் தடை

அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலட்சுமி வெளியிட்ட ... மேலும் பார்க்க

மனைவி பிரிந்து சென்றதால் கணவா் தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், தேனூா் தச்சம்பத்து கிராமத்தைச் சோ்ந்த மதிராம் மகன் மூா்த்தி (44). இவரது மனைவி பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

ஆந்திர மாநிலத்திலிருந்து மதுரை வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா். மதுரை-பரமக்குடி நான்கு வழிச் சாலையில் சிலைம... மேலும் பார்க்க

மனமகிழ் மன்றங்கள் குறித்து புகாா் எழுந்தால் உரிமம் ரத்து

மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தால், கூட்டுறவு சங்க விதிகளின்படி விசாரித்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டத... மேலும் பார்க்க