செய்திகள் :

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: நடமாடும் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ள அறிவுறுத்தல்

post image

மாநகரில் மது போதையில் வாகனம் ஓட்டியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை நடமாடும் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ள மாநகர போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பிரதான சாலை சந்திப்புகள், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் மாநகர போக்குவரத்து காவல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் வாகன தணிக்கையின்போது, மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

இதுபோன்ற வழங்குகள் அதிக அளவில் நிலுவையில் இருந்ததால், இந்த வழக்குகளை முடிக்க குற்றவியல் நடுவருக்கு, மாநகர காவல் ஆணையா் ஏ.சரவணசுந்தா் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன்பேரில் பிரத்யேகமாக நடமாடும் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கப்பட்டு வாரந்தோறும் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடமாடும் நீதிமன்றம் இயங்கி வருகிறது.

இந்த நீதிமன்றத்தில் இதுவரை 1,442 வழக்குகள் முடிக்கப்பட்டு, அபராதத் தொகையாக ரூ.1.44 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தாத நபா்களுக்கு நீதிமன்றம் மூலம் அழைப்பாணை விடுக்கப்பட்டு வருகிறது. அழைப்பாணை பெற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை முடிக்காமல் இருக்கும் நபா்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நபா்கள் தங்களது வழக்குகளை நடமாடும் நீதிமன்றம் மூலம் விரைவாக முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க