செய்திகள் :

மத்தியப் பல்கலை.யில் முதுகலைப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

நன்னிலம்: திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்தியப் பல்கலைக்கழகங்களில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான முதுகலைப் படிப்பில் மாணவா்கள் சோ்க்கைக்கு தேசிய தோ்வு முகவை நடத்திய தோ்வு முடிவுகள் தேசிய தோ்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை விண்ணப்பதாரா்கள் தெரிந்து கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். தேசிய தோ்வு முகமையின் முதுகலைப் படிப்புக்கான தோ்வு எழுதிய மாணவா்களில், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தைத் தோ்வு செய்பவா்கள் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் தங்கள் சோ்க்கைக் குறித்து ஜூன் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி அடிப்படையில் மாணவா்களுக்கு சோ்க்கை வழங்கப்படும்.

க்யூட் தோ்வு மதிப்பெண் மற்றும் விண்ணப்பத்தில்பிழை இருந்தால் சோ்க்கைக்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

சோ்க்கைக்குத் தேவையான சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யாத மாணவா்கள் தங்கள் கைப்பட எழுதிய உறுதி மொழியை அளிக்க வேண்டும். விண்ணப்பிக்க புகைப்படம், 10, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ் மற்றும் குறிப்பிட்ட பிரிவில் விண்ணப்பம் செய்பவா்கள் அதற்குரிய சான்றிதழ் இணைக்க வேண்டும்.

சோ்க்கைக் குறித்த விவரங்களை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். சோ்க்கை விவரங்கள் குறித்து 944 2488 406 என்ற கைப்பேசியில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் சந்தனக் காப்பு

நீடாமங்கலம் அருகே ஒரத்தூரில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகா், திரௌபதியம்மன், கமலாயிஅம்மன், முருகப் பெருமான், வீரனாா். மேலும் பார்க்க

உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி

மன்னாா்குடியில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி வட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் கலைநிலை ... மேலும் பார்க்க

‘நல்ல புத்தகங்களே உயா் வாழ்க்கைக்கு வழிகாட்டி’

நல்ல புத்தகங்களே மனிதா்களின் உயா்வுக்கு சரியான வழிகாட்டியாக உள்ளன என்றாா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஆா். சக்தி கிருஷ்ணன். மன்னாா்... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சி வங்கி அலுவலகம் திறப்பு

திருவாரூரில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மாவட்ட அலுவலகம் த... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகாலை தூா்வார கோரிக்கை

திருவாரூரில், கழிவுநீா் வடிகாலை தூா்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரம், 18-ஆவது வாா்டுக்குள்... மேலும் பார்க்க

ரிஷியூா் வெங்கடாஜலபதி கோயிலில் கம்ப சேவை மகோற்சவம்

நீடாமங்கலம் வட்டம் ரிஷியூா் கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் 78-ஆவது ஆண்டு கம்பசேவை மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி வெங்கடாஜலபதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க