செய்திகள் :

மத்தியப் பிரதேசத்தில் மினி பேருந்தும் லாரியும் மோதல்: குஜராத் இசைக் குழுவின் 4 பேர் பலி

post image

மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியதில் குஜராத்தைச் சேர்ந்த இசைக் குழுவின் 4 பேர் பலியாகினர்.

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இசைக் குழுவினர் நிகழ்ச்சியை நடத்திவிட்டு குஜராத்திற்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனர். ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை காலை 6 மணியளவில் மினி பேருந்தும் சிறிய லாரியும் மோதியது.

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தவறான பாதையில் திரும்பியதால் விபத்து நிகழ்ந்தது. இதில் இசைக்குழு உறுப்பினர்களான ஹார்திக் டேவ் (37), பாடகர் ராஜா தாக்கூர் (28), அங்கித் தாக்கூர் (17), ராஜேந்திர சோலங்கி (47) ஆகியோர் பலியாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், 17 பேருடன் வந்த மினி பேருந்தின் ஓட்டுநர், வாரணாசியில் இருந்து இடைவிடாமல் பயணித்ததால், சோர்வு காரணமாக மயக்கமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது என போலீஸ் அதிகாரி கூறினார். நான்கு பேரின் உடல்களும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ராகுலும் முகமது அலி ஜின்னாவும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள்: பாஜக விமர்சனம்!

படுகாயமடைந்த இருவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. "காயமடைந்த ஓட்டுநரின் உடல்நிலை சீராகி பேசத் தொடங்கிய பிறகு, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்" என்று போலீஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Four members of a Gujarat-based music band were killed and 11 other persons were injured on Saturday in a collision between a mini bus and a small truck in Shivpuri district of Madhya Pradesh, police said.

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மட்டுமில்லாது வட மாநிலங்களான உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.உத்தரகண்ட்டில் தலைநகர் டேராடூனில் உள்ள மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் வெ... மேலும் பார்க்க

அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலைமை: லாலு பிரசாத் யாதவ்

அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலையில் நாடு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - அமித் ஷா

ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பால் பெய்த கனமழை, பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டி என்ற கிராமத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர் மற்றும் 6 பேர் காயமடைந்ததாக அதிகா... மேலும் பார்க்க

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!

அயர்லாந்தில் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக இந்தியர் ஒருவர் சமூக ஊடகத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, அவரின் சமூக ஊடகப் பதிவில்,அயர்லாந்தில் பணிபுரியும் நான் (22), வேல... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா வர்த்தம்! பேச்சுவார்த்தை ஒத்திவைப்பா?

இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பேச்சுவார்த்தை ரத்து செய்யும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக, இம்மாதம் 25 முதல் 29 வரையில் பேச்சுவார்த்தை நடத்... மேலும் பார்க்க