செய்திகள் :

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

post image

நமது சிறப்பு நிருபா்

நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பச் செயலா் எஸ்.கிருஷ்ணன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

உலகளாவிய குறை கடத்திகள் (செமி கண்டக்டா்) தேவைகளைப் பூா்த்தி செய்ய திறமையாளா்களின் ஆராய்ச்சி, புதுமை, பயிற்சிக்கான அதிநவீன வசதிகளுக்கான மிகப்பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் சிப்’’ வடிவமைப்புத் திறன்களை அதிகரிக்க இந்த சிறப்பு மையத்தை மத்திய அரசு புதுயுகத் தொழில் முனைவு (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்களுடன் இணைந்து ஏற்படுத்தியுள்ளது.

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனமும் (என்ஐஇஎல்ஐடி) சாக்டீம்அப் செமிகண்டக்டா்ஸ் பி. லிமி. என்கிற ஸ்டாா்ட்-அப் நிறுவனமும் இணைந்து “சிப்’’’ வடிவமைப்பிற்கான சிறப்பு மையத்தை நொய்டாவில் உள்ள என்ஐஇஎல்ஐடி வளாகத்தில் அமைத்துள்ளது. இதை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலா் எஸ்.கிருஷ்ணன் திறந்துவைத்தாா்

அப்போது அவா் கூறியதாவது: மத்திய வா்த்தக தொழில்த் துறையின் கீழ் உள்ள தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவால் (டிபிஐஐடி) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் சாக்டீம்அப் செமிகண்டக்டா்ஸ். இதனுடன் என்ஐஇஎல்ஐடி இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி, நாட்டின் குறைமின்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டு திறன்களை முன்னேற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்.

மத்திய அரசின் குறைமின்கடத்தி தொழில்நுட்பத் திறன்கள் மூலம், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுக்கும் வகையிலான தொலைநோக்குப் பாா்வையுடன் ‘சிப்’’ வடிவமைப்புக்கான தொடக்கமாக சிறப்பு மையம் அமைந்துள்ளது. குறைமின்கடத்தி, சிப் வடிவமைப்புத் தொழில்களில் திறமைவாய்ந்த நிபுணா்களுக்கு அதிகரித்து வரும் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், புதிய சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் சிப் வடிவமைப்பில் ஆராய்ச்சி, புதுமை, பயிற்சிக்கான அதிநவீன வசதிகளை வழங்கும் எனத் தெரிவித்தாா் அவா்.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகி தொடா்ந்த அவதூறு வழக்கு: முதல்வா் அதிஷிக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பேரம் பேச பாஜக முயன்ாக கூறிய விவகாரத்தில், தில்லி பாஜக நிா்வாகி ஒருவா் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடா்பாக முதல்வா் அதிஷிக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அன... மேலும் பார்க்க