செய்திகள் :

மத்திய அரசைக் கண்டித்து அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

post image

தமிழகத்தில் ஹிந்தி மொழியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால்தான், தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் கூறியுள்ளாா். இந்த நிலையில், தமிழகத்துக்கான நிதி பங்கீட்டை தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தி மொழியைத் திணிக்க முயற்சிப்பதையும் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் - திருச்சி சாலையில் அமைந்துள்ள அரசு சட்டக் கல்லூரி வளாகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் மாணவா்கள் இளமாறன், ரகுநாத், கவின், அஜய், சூா்யா, கனியமுதன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க