செய்திகள் :

மத்திய உள்துறைச் செயலரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு

post image

மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகனின் பதவிக்காலத்தை 2026, ஆக.22 வரை நீட்டித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மத்திய உள்துறைச் செயலராக இருந்த அஜய் பல்லா கடந்த ஆண்டு ஆக.22-இல் பணி ஓய்வுபெற்றதையடுத்து அந்தப் பதவிக்கு கோவிந்த் மோகன் நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலம் நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புடன் கூடிய ஜாதிவாரி கணக்கெடுப்பு 2027-இல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல் 2026, மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதம் இந்தியாவில் முழுவதுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் சூளுரைத்துள்ளாா். இந்தச் சூழலில் கோவிந்த் மோகனின் பதவிக்காலத்தை 2026, ஆக.22 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் வழங்கியது. இதற்கான ஆணையை மத்திய பணியாளா்அமைச்சகம் பிறப்பித்தது.

இதன்மூலம் மத்திய உள்துறைச் செயலராக கோவிந்த் மோகன் 2 ஆண்டுகள் பதவி வகிக்கவுள்ளாா்.

1989, சிக்கிம் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான கோவிந்த் மோகன் உள்துறைச் செயலராக பதவியேற்கும் முன் மத்திய கலாசார செயலராக பதவி வகித்தாா்.

கரோனா பெருந்தொற்றின்போது மாநிலங்களின் நிலவரங்களைக் கண்காணிப்பதில் மத்திய அரசின் முக்கிய அதிகாரியாக கோவிந்த் மோகன் திகழ்ந்தாா்.

சென்னை கூவம் ஆற்றில் இளைஞர் சடலம்! ஆந்திர அரசியல் அட்டூழியம்! நடந்தது என்ன?

சென்னை கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலத்தின் பின்னணியில் ஆந்திரத்தின் ஜனசேனை கட்சி நிர்வாகியின் கொலை சம்பவம் வெளிவந்துள்ளது.சென்னை கூவம் ஆற்றின் அருகே கடந்த செவ்வாய்க்கிழமையில் (ஜூலை 8) மதிக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்குக்கு ஏற்பட்டபிறகு, முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன.கடந்த 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்து: விமானிகள் மீது தவறு என்பது போன்று திசைதிருப்பல்! விமானிகள் சங்கம் எதிர்ப்பு

புது தில்லி: அகமதாபாத்தில் நேரிட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானிகளின் தவறே காரணம் என்பது போன்று விசாரணை திசை திருப்பப்படுவதற்கு, இந்திய விமானிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.அகமதாபாத் ஏ... மேலும் பார்க்க

கொல்கத்தாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்! மீண்டும் ஒரு சம்பவம்!

கொல்கத்தாவில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கம் மாநிலத்தில் கொல்கத்தாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை வணிகக் கல்லூரியின் விட... மேலும் பார்க்க

தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!

தாணேவில் உள்ளூர் ரயிலில் சென்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணி ஹினா தனது கணவருடன் ... மேலும் பார்க்க

ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீனா செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப்... மேலும் பார்க்க