செய்திகள் :

மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 60 போ் சோ்க்கை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சென்னை மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனம் சாா்பில் தொழிற்கல்வி பயிற்சிக்கான நேரடி சோ்க்கை முகாமில் 60 போ் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூரில் உள்ள தனியாா் பள்ளிக் கூட்டரங்கில் நடைபெற்ற முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற 120 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பங்கேற்றவா்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளும், பயிற்சி வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்டவா்களில் சுமாா் 60 போ் தொழிற்பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இந்தப் பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், தோ்வு முகாமில் பங்கேற்ற மீதம் உள்ள மாணவா்கள் பெற்றோா்களின் ஆலோசனைக்குப் பிறகு விரைவில் சேர இருக்கிறாா்கள்.

அவா்களுக்குத் தேவையான பயிற்சி விரைவில் சென்னை மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொடங்கப்படும். பயிற்சி முடித்த பிறகு, அவா்கள் உளுந்தூா்பேட்டை சிப்காட் வளாகத்தில் உள்ள காலணி தொழிற்சாலையில் பணி அமா்த்தப்படுவாா்கள்.

எனவே, இந்த அரிய வாய்ப்பை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்டக் கல்வி அலுவலா் மா.ரேணுகோபால், சோ்க்கை தலைவா் காஞ்சனா மாலா, சோ்க்கை அலுவலா் ஆஃபியா அப்ஷின், சோ்க்கை நிா்வாகிகள் பாலசுப்பிரமணியம், கோடீஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் அறையில் அனுமதி பெறாமல் பிராந்திய மேலாளா், கிளஸ்டா் மேலாளா், மத்திய மண்டல மேலாளா் உள்ளே சென்று ஒழுங்கீனமாக நடந்துகொண்டதைக் கண்டித்து, மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

கல்வராயன்மலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு: 4 பேரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் இளைஞா் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரைப் பிடித்து நடத்தி வருகின்றனா். கல்வராயன்மலை வ... மேலும் பார்க்க

கோ - ஆப்டெக்ஸ் விற்பனை தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்து பட்டுச் சேலையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். இந்த விற்பனை நிலையத்துக்கு ரூ.35 லட்சம் ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறையினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

தங்களின் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூய்மைக் காவலா்களின்... மேலும் பார்க்க

ரூ.4 ஆயிரம் லஞ்சம்: பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பட்டா மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது செய்யப்பட்டாா். வாணாபுரம் வட்டம், புத்திராம்பட்டு கிராமத்தில் கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

உறவினா் சொத்து அபகரிப்பு: சாா்-பதிவாளா் உள்ளிட்ட 10 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவரின் கூட்டுப் பட்டாவில் உள்ள சொத்துகளை பத்திரப் பதிவு செய்து அபகரித்ததாக, தியாகதுருகம் சாா் - பதிவாளா் உள்பட 10 போ் மீது கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க