மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் மேலும் விரிவடையக் கூடும் என்ற அச்சத்தில், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது அல்லது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்துள்ளனா். குறிப்பாக ஈரான், இராக் உள்ளிட்ட நாடுகளில் படித்து வரும் பிற நாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் பரிதவித்து வருகின்றனா்.