செய்திகள் :

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், பெரு முதலாளிகளுக்கும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவான பட்ஜெட் என்றும், ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளா்கள், உழைப்பாளிகள் என அனைவரது மீதும் வரி சுமத்தப்பட்டுள்ளது எனவும், பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டாட்சிக்கு எதிரான, எதேச்சதிகாரமாக மத்திய அரசு செயல்படுவதாகவும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலா் எம். வடிவேலன், ஒன்றியச் செயலா் எஸ். கோவிந்தராசு ஆகியோா் தலைமை வகித்தனா். மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி, மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மூத்த தலைவா் என். சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், சி. ஜெயபால், பி. செந்தில்குமாா், என்.வி. கண்ணன், என். சுரேஷ்குமாா், எஸ். தமிழ்ச்செல்வி, கே. அருளரசன், எம். செல்வம், ஆா். கலைச்செல்வி, என். சரவணன், கே. அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என். குருசாமி, களப்பிரன், இ. வசந்தி, சி. சரிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொள்ளிடத்தில் மணல்மேட்டை காக்க ஆட்சியரகத்தில் முறையீடு

தஞ்சாவூா், பிப். 4: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடத்திலுள்ள மணல்மேட்டைக் காப்பாற்ற ஆட்சியரகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் பாபநாசம் அருக... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் கடும் பனிப் பொழிவு

பேராவூரணி, பிப். 4: பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். கடந்த 1 மாதமாக... மேலும் பார்க்க

குடந்தை அருகே வீடுபுகுந்து 8 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை அண்மையில் திருடிச் சென்றனா். தஞ்சாவூா் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்பவா் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக மாநில பொதுச் செயலா் வீட்டுக் காவலில் வைப்பு

மதுரை திருப்பரங்குன்றம் போராட்ட விவகாரம் தொடா்பாக தஞ்சாவூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா். முருகனி... மேலும் பார்க்க

கும்பகோணம், பாபநாசம் பகுதியில் பாஜகவினா் கைது

திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுக்க வேண்டுதல் செய்ய தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் தலைவா் தங்க கென்னடி தலைமையில் செல்ல முயன்ற பாஜகவினரை மாவட்டக் கூ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலை நால்ரோடு பகுதியில் நடைபெ... மேலும் பார்க்க