செய்திகள் :

திருப்பரங்குன்றம் விவகாரம்: பாஜக மாநில பொதுச் செயலா் வீட்டுக் காவலில் வைப்பு

post image

மதுரை திருப்பரங்குன்றம் போராட்ட விவகாரம் தொடா்பாக தஞ்சாவூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக இந்துக்கள், இஸ்லாமியா்கள் இடையே சா்ச்சை ஏற்பட்டு, போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையைக் காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணியினா் உள்ளிட்ட அமைப்பினா் அறிவித்தனா்.

இதுதொடா்பாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை முதல் இந்து அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகளைக் காவல் துறையினா் கைது செய்தனா். அதன்படி பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் எலீசா நகரிலுள்ள அவரது வீட்டிலும், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் மகா்நோன்புசாவடி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகேயுள்ள வீட்டிலும் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். இதேபோல மாவட்டத்தில் 181 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கருப்பு முருகானந்தம் கூறுகையில், திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்பவா்களைக் காவல் துறையினா் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. எத்தனை பேரை கைது செய்தாலும், வீட்டுக் காவலில் வைத்தாலும் திருப்பரங்குன்றம் மலையை அசுத்தப்படுத்துவதை, அதைக் கைப்பற்றி விடலாம் என நினைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் காக்கத் தொடா்ந்து போராடுவோம் என்றாா் அவா்.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெரு முதலாளிகளுக்கும், காா்ப்பரேட் நிறுவனங... மேலும் பார்க்க

கொள்ளிடத்தில் மணல்மேட்டை காக்க ஆட்சியரகத்தில் முறையீடு

தஞ்சாவூா், பிப். 4: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடத்திலுள்ள மணல்மேட்டைக் காப்பாற்ற ஆட்சியரகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முறையிட்டனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் பாபநாசம் அருக... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் கடும் பனிப் பொழிவு

பேராவூரணி, பிப். 4: பேராவூரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். கடந்த 1 மாதமாக... மேலும் பார்க்க

குடந்தை அருகே வீடுபுகுந்து 8 பவுன் நகைகள் திருட்டு

கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை அண்மையில் திருடிச் சென்றனா். தஞ்சாவூா் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்பவா் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). ... மேலும் பார்க்க

கும்பகோணம், பாபநாசம் பகுதியில் பாஜகவினா் கைது

திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுக்க வேண்டுதல் செய்ய தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்டத் தலைவா் தங்க கென்னடி தலைமையில் செல்ல முயன்ற பாஜகவினரை மாவட்டக் கூ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலை நால்ரோடு பகுதியில் நடைபெ... மேலும் பார்க்க