செய்திகள் :

மத்தூர்: சாலை விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

post image

கிருஷ்ணகிரியில் இரவுநேர கண்காணிப்பு பணியில் இருந்த தலைமை காவலர் ஜெஸ்மின் மில்டன் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளரான மகாலிங்கம், தலைமைக் காவலர் ஜெஸ்மின் மில்டன் ராஜ் என்கிற மில்டன், போச்சம்பள்ளி ஏழாம் அணி பயிற்சிக் காவலர் சுகுமார் ஆகியோர் சனிக்கிழமை (ஜூலை 28) இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சமயத்தில், நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கோட்டூர் மாரியம்மன் கோயிலில் தணிக்கை செய்து, கையொப்பமிட்டு மத்தூர் பகுதியில் தணிக்கை செய்ய தலைமை காவலர் மில்டன் மற்றும் பயிற்சி காவலர் சுகுமார் ஆகியோர் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கர்நாடக மாநிலம், குடகிலிருந்து புதுச்சேரிக்கு கோவில் சிலைகள் செய்ய கிரானைட் கற்கள் பாரம் ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி மீது, அதன் பின் தொடர்ந்து வந்த இரும்பு பாரம் ஏற்றிய லாரி மோதியது.

இதில் நிலைதடுமாறிய டாரஸ் லாரி, காவலர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தலைமை காவலர் மில்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

இரவுநேர கண்காணிப்பின்போது சாலை விபத்தில் சிக்கி தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

போலீஸ் விசாரணையில் திமுகவினருக்கு ராஜமரியாதை- அண்ணாமலை

போலீஸ் விசாரணையில் திமுகவினர் ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத... மேலும் பார்க்க

மீனவர்களை விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தி... மேலும் பார்க்க

வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்வா?- அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சமூக வலைதளங்களிலும், சில செய்தி... மேலும் பார்க்க

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடி: 4 பேர் கைது

சென்னையில் ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகரைச் சேர்ந்தவர், வாட்ஸ்அப் செய்தியை பார்த்து அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலைதளத்தில் சேர்வதற்காக அவருக்கு... மேலும் பார்க்க

காவல்துறையை நிர்வகிக்கத் தெரியாத முதல்வர்! எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சிவகங்கையில் நகைகள் மாயமானது தொடா்பாக விசாரணையில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தற்காலிக ஊழியா் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறையை நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கும் முதல்வருக்கு அதிமு... மேலும் பார்க்க

புதுச்சேரி பாஜக தலைவராகிறார் ராமலிங்கம்

புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகிறார். வேட்பு மனு தாக்கல் இன்று 12 மணிக்கு நிறைவு பெற்ற நிலையில் ராமலிங்கம் மட்டுமே தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நாளை... மேலும் பார்க்க