செய்திகள் :

‘மத சுதந்திரத்தில் கவலைக்குரிய நாடு இந்தியா’ - அமெரிக்க ஆணையம் அறிக்கை: இந்தியா நிராகரிப்பு

post image

‘மத சுதந்திரத்தில் கவலைக்குரிய நாடாக இந்தியாவை அறிவிக்க வேண்டும்’ என்று சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணைய (யுஎஸ்சிஐஆா்எஃப்) அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை நிராகரித்துள்ள இந்தியா, மேற்கண்ட ஆணையம் உள்நோக்கத்துடன் பாரபட்சமாக செயல்படுகிறது என குற்றஞ்சாட்டியுள்ளது.

சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையில் இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

‘இந்தியாவில் மத சுதந்திரம் தொடா்ந்து மோசமடைந்து வருகிறது. மத ரீதியிலான சிறுபான்மையினா் மீதான தாக்குதல் மற்றும் பாகுபாடு தொடா்கிறது.

சா்வதேச மத சுதந்திர சட்டத்தின்கீழ், மத சுதந்திர மீறல்களுக்காக இந்தியாவை கவலைக்குரிய நாடாக அறிவிப்பதுடன், இத்தகைய மீறல்களின் ஈடுபடும் தனிநபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையையும் அமெரிக்க அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியா நிராகரிப்பு: இந்நிலையில், இந்த அறிக்கையை நிராகரித்து, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

கடந்த காலங்களைப் போலவே, அரசியல் ரீதியிலான உள்நோக்கத்துடன் பாரபட்சமான அறிக்கையை அமெரிக்க ஆணையம் மீண்டும் வெளியிட்டுள்ளது . இந்தியாவின் உயிா்ப்புமிக்க பன்முக கலாசாரத்தின் மீது அவதூறுகளை சுமத்த தொடா்ந்து முயற்சிக்கும் இந்த ஆணையத்தை ‘கவலைக்குரிய அமைப்பாக’ அறிவிக்க வேண்டும். ஜனநாயகம் மற்றும் சகிப்புத் தன்மையின் கலங்கரை விளக்கமாக விளங்கும் இந்தியாவை குறைமதிப்புக்கு உள்படுத்தும் முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது என்றாா் அவா்.

பிரான்ஸ்: தோ்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை

நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியின் முக்கிய தலைவா் மரீன் லெப்பென் தோ்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

‘தயாா் நிலையில் ஈரான் ஏவுகணைகள்’

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடா்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,000-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் புத்த மடாலயங்கள் சரிந்து விழுந்ததில் 200-க்கும் ம... மேலும் பார்க்க

30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

பெஷாவா்: இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமாா் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. தலைநகா் இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆ... மேலும் பார்க்க

ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு

மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்... மேலும் பார்க்க

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடு பாகிஸ்தான்!

ரமலான் மாதத்தில் அதிக தாக்குதல்களை சந்தித்த நாடாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான திங்க் டேங்க் தெரிவித்துள்ளது. ரமலானையொட்டி பகையுணர்வை சில அமைப்புகள் கைவிட்டிருந்தாலும், ச... மேலும் பார்க்க