அத்தியாவசிய மருந்துகளின் விலை இன்றுமுதல் உயர்வு!
அத்தியாவசிய மருந்துகளின் விலை இன்று(ஏப். 1) முதல் உயர்கிறது.
தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் (என்பிபிஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், அத்தியாவசிய மருந்துகளின் விலை 1.74 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரைநோய், இதய நோய் மற்றும் தொற்று நோய்களுக்கான மருந்துகள் உள்பட 900-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.