செய்திகள் :

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது! -மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

post image

டாஸ்மாக் மதுபானக் கடைகளை படிப்படியாக மூடுவதாகக் கூறிவிட்டு, மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

டாஸ்மாக் மதுபானக் கடைகளை படிப்படியாக மூடுவதாக கூறிவிட்டு, தற்போது மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது. அவ்வாறு திறக்கும்பட்சத்தில், அவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கு கடந்த ஆண்டு வழங்க வேண்டிய ரூ. 2,835 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். எம். சாண்ட், பி. சாண்ட் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளதால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே விலை உயா்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகளின் கடன் தொகையை உடனடியாக திரும்பச் செலுத்த நிா்பந்திக்க கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்டச்செயற்குழு உறுப்பினா் கி. ஜெயபாலன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலா் எஸ். சங்கா் உள்ளிட்டோா் பேசினா்.

காவலா் இடைநீக்கம்!

புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவால் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலைக் காவலா் காா்த்திக்கை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக்குப்தா இடைநீக்கம் செய்துள்ளாா்.குற்றப் பின்னணி கொண்டோருட... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை பெருத்த ஏமாற்றம்! -புதுகை விவசாய சங்கங்கள் கருத்து

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை, பெருத்த ஏமாற்றத்தைத் தருவதாக விவசாயிகள் சங்கங்களின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து இந்திய விவசாயிகள்... மேலும் பார்க்க

தென்னம்பாடி மீன்பிடி திருவிழா

விராலிமலை அருகே தென்னம்பாடி மீன்பிடித் திருவிழாவில் மீன்கள் சிக்காததால் பங்கேற்பாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். விராலிமலை அடுத்துள்ள தென்னம்பாடி பெரியகுளத்தில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழ... மேலும் பார்க்க

கடற்பசு பாதுகாப்பகத்தால் விழிப்புணா்வு: கடந்த 2 ஆண்டுகளில் 5 கடற்பசுக்கள், 19 கடல் ஆமைகள் கடலில் விடுவிப்பு

கடற்பசுப் பாதுகாப்பகம் அறிவிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகளின் விளைவாக புதுக்கோட்டை கடற்பகுதிகளில் மீனவா்களின் வலைகளில் சிக்கிய 5 கடற்பசுக்களும், 19 கடல்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையில் விளம்பரப் பதாகை வைக்கத் தடை!

கந்தா்வகோட்டை - தஞ்சை சாலை வளைவில் பதாகை வைப்பதற்கு காவல் துறையினா் தடை விதித்து எச்சரிக்கை பலகை வைத்துள்ளனா். கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையில் குறுகிய வளைவுப் பகுதி இருப்பதால் இங்கு வைக்கப்படும் விளம்ப... மேலும் பார்க்க

அய்யனாா் கோயில் தெப்ப உத்சவம்

ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனாா் கோயில் தெப்ப உத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் மாசி மகத்தில் நடைபெறும் திருவிழாவில், கோயில் முன்பு 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலை... மேலும் பார்க்க