கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
மனித விந்தணுக்களுக்கு இடையே நடைபெறும் பந்தயம் - இந்த `Sperm Race’ எப்படி நடத்தப்படுகிறது தெரியுமா?
உலகில் முதன்முறையாக விந்தணுக்களுக்கு இடையே பந்தயம் நடைபெற உள்ளது. இந்த வழக்கத்திற்கு மாறான ரேஸில் மனிதர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை, விந்தனுக்கள் தான் ஈடுபடுகின்றன.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த ”விந்தணு ரேஸ்” நடைபெற உள்ளது. உலகமெங்கும் கருவுறுதல் விகிதங்கள், குறைந்து வருவதால் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த பந்தயத்தை நடத்துகிறது. உண்மையாகவே விந்தணுகளிடையே ரேஸ் நடத்தப்படவுள்ளது.
இந்த ரேஸ், வரும் ஏப்ரல் 25ஆம் தேதி லாஸ் ஏஞ்சலில் உள்ள ஹாலிவுட் பல்லேடியத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டி மற்ற விளையாட்டுப் போட்டிகளைப் போன்று பிரஸ் மீட், வர்ணனை, பெட்டிங் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியை காண 1000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விந்தணு ரேஸ் எப்படி நடக்கும்?
போட்டிகளை பார்வையாளர்கள் உயர் தெளிவு திறன் கொண்ட மைக்ரோஸ்கோப் (microscopic racetrack) மூலம் பார்ப்பார்கள். இது microscopic racetrack-ல் விந்தணுக்கள் நீந்தும் போது அவற்றின் ஒவ்வொரு அசைவுகளையும், அதில் காட்டும்.
பெண்ணின் இனப்பெருக்க அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நுண்ணிய பாதையில் இந்த விந்தணு ரேஸ் நடைபெறும். இரண்டு வெவ்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்ட நுண்ணிய விந்தணுக்கள் போட்டியிடும். அவை ஒவ்வொன்றும் 0.05 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் கொண்டதாக இருக்கும்.
மனித விந்தணுக்கள் நிமிடத்திற்கு 5 மில்லி மீட்டர் வேகத்தில் நீந்தக் கூடியதாக இருந்தாலும், இந்த வேகத்தில் தான் பயணிக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் ரேஸ் எவ்வளவு நேரம் நடக்கும் என்பதையும் உறுதியாக கூறப்படவில்லை.
எரிக் ஜு, நிக் ஸ்மால், ஷேன் ஃபேன் மற்றும் காரெட் நிகோனியென்கோ ஆகிய 4 இளைஞர்கள் சேர்ந்து இந்த ரேஸை நடத்துகின்றனர். உலகின் முதன்முதலில் நடைபெறும் விந்தணு ரேஸுக்காக $1 மில்லியன் டாலரையும் அவர்கள் திரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.