செய்திகள் :

மனித விந்தணுக்களுக்கு இடையே நடைபெறும் பந்தயம் - இந்த `Sperm Race’ எப்படி நடத்தப்படுகிறது தெரியுமா?

post image

உலகில் முதன்முறையாக விந்தணுக்களுக்கு இடையே பந்தயம் நடைபெற உள்ளது. இந்த வழக்கத்திற்கு மாறான ரேஸில் மனிதர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை, விந்தனுக்கள் தான் ஈடுபடுகின்றன.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த ”விந்தணு ரேஸ்” நடைபெற உள்ளது. உலகமெங்கும் கருவுறுதல் விகிதங்கள், குறைந்து வருவதால் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த பந்தயத்தை நடத்துகிறது. உண்மையாகவே விந்தணுகளிடையே ரேஸ் நடத்தப்படவுள்ளது.

இந்த ரேஸ், வரும் ஏப்ரல் 25ஆம் தேதி லாஸ் ஏஞ்சலில் உள்ள ஹாலிவுட் பல்லேடியத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டி மற்ற விளையாட்டுப் போட்டிகளைப் போன்று பிரஸ் மீட், வர்ணனை, பெட்டிங் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியை காண 1000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விந்தணு ரேஸ் எப்படி நடக்கும்?

போட்டிகளை பார்வையாளர்கள் உயர் தெளிவு திறன் கொண்ட  மைக்ரோஸ்கோப் (microscopic racetrack) மூலம் பார்ப்பார்கள். இது microscopic racetrack-ல் விந்தணுக்கள் நீந்தும் போது அவற்றின் ஒவ்வொரு அசைவுகளையும், அதில் காட்டும்.

பெண்ணின் இனப்பெருக்க அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நுண்ணிய பாதையில் இந்த விந்தணு ரேஸ் நடைபெறும். இரண்டு வெவ்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்ட நுண்ணிய விந்தணுக்கள் போட்டியிடும். அவை ஒவ்வொன்றும் 0.05 மில்லி மீட்டர் மட்டுமே நீளம் கொண்டதாக இருக்கும்.

மனித விந்தணுக்கள் நிமிடத்திற்கு 5 மில்லி மீட்டர் வேகத்தில் நீந்தக் கூடியதாக இருந்தாலும், இந்த வேகத்தில் தான் பயணிக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் ரேஸ் எவ்வளவு நேரம் நடக்கும் என்பதையும் உறுதியாக கூறப்படவில்லை.

எரிக் ஜு, நிக் ஸ்மால், ஷேன் ஃபேன் மற்றும் காரெட் நிகோனியென்கோ ஆகிய 4 இளைஞர்கள் சேர்ந்து இந்த ரேஸை நடத்துகின்றனர். உலகின் முதன்முதலில் நடைபெறும் விந்தணு ரேஸுக்காக $1 மில்லியன் டாலரையும் அவர்கள் திரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan Weekly Quiz: விவாதப்பொருளான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு டு ஐபிஎல்; இந்த வார கேள்விகள்!

விவாதப்பொருளான உச்ச நீதிமன்றம் பயன்படுத்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு, அடுத்த இந்திய தலைமை நீதிபதி, தொடங்கிய மீன்பிடித் தடைக்கலாம், ஐ.பி.எல், சூர்யாவின் ரெட்ரோ திரைப்பட டிரெய்லர் ரிலீஸ் எனப் பல நிக... மேலும் பார்க்க

"இறைச்சி சாப்பிடுபவர்கள் அசுத்தமானவர்கள்" -மராத்தியர் vs குஜராத்தியர் ஆக மாறிய தகராறு; பின்னணி என்ன?

மும்பையில் அடிக்கடி மராத்தியர் மற்றும் குஜராத்தியர் இடையே சிறு சிறு தகராறு ஏற்படுவதுண்டு. குஜராத்தியர்கள் வசிக்கும் கட்டிடங்களில் மராத்தியர்களுக்கு வீடு விற்பனை செய்வது கிடையாது.அப்படியே இரு தரப்பினரு... மேலும் பார்க்க

”கைதிகளுடன் தனிமையில் இருக்கலாம்...” - சிறையில் திறக்கப்பட்ட ”பாலியல் அறை” - எங்கே தெரியுமா?

இத்தாலியில் சிறை கைதிகளுக்காக முதன்முதலில் "பாலியல் அறை" திறக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய உம்ப்ரியா பகுதியில் உள்ள சிறையில் திறக்கப்பட்ட இந்த பாலியல் அறையில் ஒரு கைதி தனது பெண் துணைவியுடன் தனிப்ப... மேலும் பார்க்க

`இது என் தாயார் விருப்பம்’ - 60 வயதில் கட்சி பெண் நிர்வாகியை மணந்த பாஜக மூத்த தலைவர்

மேற்கு வங்க மாநில முன்னாள் பா.ஜ.க தலைவராக இருப்பவர் திலிப் கோஷ். மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பா.ஜ.க-வை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்த பெருமை திலிப் கோஷிற்கு உண்டு. 60 வயதாகும் திலிப் கோஷ் தனது ச... மேலும் பார்க்க

`அவருடன்தான் வாழ்வேன்’ - கைகொடுக்காத 12 மணிநேர கவுன்சிலிங்; வருங்கால மருமகனுடன் சென்ற பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்தவர் சப்னா தேவி. இவரின் மகளுக்கு கடந்த 16ம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 8-ம் தேதி சப்னா தேவி தனது மகள் திருமணம் செய்ய இருந்த எதிர்... மேலும் பார்க்க