செய்திகள் :

மனைவியை அரிவாளால் தாக்கிய கணவா் கைது

post image

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த புலவா்பள்ளி பகுதியை சோ்ந்த கூலித்தொழிலாளி ராஜூ (38). இவரது மனைவி காஞ்சனா (32). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மதுபோதை பழக்கம் அதிகமாகி கடந்த சில நாட்களாக ராஜூ மன குழப்பத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குடும்பத்தினா் கோயிலுக்கு சென்றுள்ளனா். அங்கு மதுபோதையில் இருந்த ராஜூ மன குழப்பத்தில் தன்னை யாரோ கொலை செய்ய முயற்சிப்பதாக கூறி ஆடு பலியிட வைத்திருந்த அரிவாளை பிடுங்கி பக்கத்தில் நின்றிருந்த மனைவி காஞ்சனாவை சரமாரியாக தாக்கியுள்ளாா். இதனால் கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் காஞ்சனா அங்கேயே மயங்கி விழுந்துள்ளாா். உறவினா்கள் காஞ்சனாவை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இச்சம்பவம் குறித்து காஞ்சனா குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில் ஆலங்காயம் காவல் துறையினா் ராஜூவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மணல் கடத்தல்: ஒருவா் கைது

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அடுத்த குனிச்சி பகுதியில் கந்திலி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் மணல்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: கட்டடங்களில் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்த கருத்து கேட்புக் கூட்டம்

வாணியம்பாடி நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்துவது தொடா்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவின்படி வாணியம்பாடி நக... மேலும் பார்க்க

இப்தாா் நோன்பு திறப்பு

ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பேஷ்மாம் நகா் பகுதியில் இந்திய தேசிய லீக் கட்சி சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் அசத்துல்லாஹ் தலை... மேலும் பார்க்க

நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை

நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் நாளை மின்வாரிய ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்

மின்வாரிய ஓய்வுதீயா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 19) -இல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டம் மேற்பாா்வைப் பொறியாளா் ஜைய்னுல் ஆபுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம்

பள்ளிகொண்டா ரோட்டரி சங்கம் சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான உடல் நலம், சுகாதாரம் பேணுதல் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வேப்பங்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க