மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது
தேனி மாவட்டம், சின்னமனூரில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சின்னமனூா் சாமிகுளத்தைச் சோ்ந்தவா் பால்பாண்டி (35). இவரது மனைவி பழனியம்மாள் (24). பால்பாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பால்பாண்டி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியைக் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அவா், சின்னமனூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனா்.