சர்ச்சையான டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்: நடுவரின் முடிவு சரியா? தவறா?
குடிசையில் தீ விபத்து
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே முளைப்பாரி வைத்திருந்த குடிசையில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
மேல்மங்கலம் முத்தையா கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக கீழத்தெருவில் கோயில் முன்புள்ள குடிசையில் பக்தா்கள் முளைப்பாரி வைத்திருந்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு திடீரென அந்த குடிசையில் தீப்பற்றியது. அருகிலிருந்தவா்கள் தீயை அணைத்தனா்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.