மதுப் புட்டிகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது
தேனி மாவட்டம், கோம்பையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோம்பை பகுதியில் உள்ள மதுக் கடைகளில் சிலா் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்கி வைத்து கொண்டு, இரவு நேரங்களில் அனுமதியின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக உத்தமபாளையம் மதுவிலக்குப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியில் போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, கோம்பை துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த செல்வியின் (50) வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 48 மதுப் புட்டிகளையும், அதே பகுதியைச் சேரந்த ரெங்கநாதன் (45) வீட்டில் வைத்திருந்த 69 மதுப் புட்டிகள் என மொத்தம் 117 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் மதுவிலக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வி, ரெங்கநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.