செய்திகள் :

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து, தற்கொலை நாடகமாடிய கணவன்... விருதுநகர் அருகே நடந்த கொடூரம்

post image

வெம்பக்கோட்டை அருகே கணவன் மனைவி இடையேயான குடும்ப சண்டையில் மனைவியை கொன்று உடலை தீ வைத்து எரித்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "வெம்பக்கோட்டை அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 38) இவரின் மனைவி முனீஸ்வரி(32). கணவன்-மனைவி இருவரும் அருகே உள்ள பட்டாசு கம்பெனியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். பொன்னுசாமி- முனீஸ்வரி தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

பொன்னுசாமி

இந்தநிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடைபெறும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவில் கோவிலுக்கு சென்ற தம்பதியினர் நடு இரவில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக அதிகாலையிலும் சண்டை ஏற்படவும் ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி, மனைவி என்றும் பாராமல் கீழே கிடந்த சிறிய உரல் கல்லை எடுத்து முனீஸ்வரியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்த முனீஸ்வரியை சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து கொலையை மறைப்பதற்காகவும், முனீஸ்வரி தற்கொலை செய்ததுபோல சித்தரிப்பதற்காகவும் தனது டூவீலரின் பெட்ரோல் டியூப் மூலமாக வாட்டர்கேனில் பெட்ரோல் பிடித்து முனீஸ்வரியின் உடல் மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். ஆனால், சடலம் முழுவதும் பற்றி எரியாமல் அரைகுறையாக எரிந்து கருகியுள்ளது.

இதற்கிடையே விஷயமறிந்து வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினரிடம், கணவன்-மனைவி சண்டையில், முனீஸ்வரி தற்கொலை செய்யும் முயற்சியில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார். நான் அதை தடுக்க முயற்சித்தும் பலனின்றி உயிரிழந்துவிட்டார் என பொன்னுசாமி கதை கட்டியுள்ளார்.

முனீஸ்வரியின் சந்தேக மரணம் தொடர்பான தகவல் வெம்பக்கோட்டை போலீஸூக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

முனீஸ்வரி

விசாரணையின் போது பொன்னுசாமியின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் இருந்த காயங்கள் இருப்பதை போலீஸார் கவனித்தனர். இதுகுறித்து போலீஸார் கேட்டதற்கு, 'இரவிலும் அதன்தொடர்ச்சியாக காலையிலும் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால் உண்டான காயம் என கூறியிருக்கிறார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், முனீஸ்வரியை கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், பொன்னுசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

`அரிய வகை விலங்கு இது' - கீரிப்பிள்ளையை வேட்டையாடிச் சமைத்து இன்ஸ்டாவில் `ரீல்ஸ்' - சிக்கிய இருவர்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கீரிப்பிள்ளையை வேட்டையாடிச் சமைத்து `அரிய வகை விலங்கு' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 2 நபர்களுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்து எச்சரித்து... மேலும் பார்க்க

கரூர்: தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி; டிட்கோ அலுவலரைக் கைதுசெய்த போலீஸ்!

சென்னை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக (டிட்கோ) வருவாய் அலுவலரகப் பணியாற்றுபவர் சூர்யபிரகாஷ். அதற்கு முன்பு இவர், சென்னை மாநகர அம்மா உணவகத்தின் இயக்குநர் பொறுப்பிலும் கடந்த சில ஆண்டுகளாகப் பதவி வகித... மேலும் பார்க்க

பள்ளி பேருந்தில் பாலியல் கொடுமை... 5 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி; கிளீனர் கைது..

செங்கல்பட்டு பாலூரில் உள்ள தனியார் ஆரம்ப பள்ளியின் பேருந்தில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு நடந்துள்ளது. பாலூரில் உள்ள அந்தத் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள... மேலும் பார்க்க

தேனி: ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை ஏமாற்றி, டூவிலரை அடகு வைத்த நபர் கைது.. என்ன நடந்தது?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் ராஜேஸ். இவரின் மனைவி ஜெயலட்சுமி (38) சொந்த பிரச்னை காரணமாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கவந்துள்ளார். மனு எழுதுவதற்காக கலெ... மேலும் பார்க்க

சென்னை: பேராசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு... போலீஸில் சிக்கிய மாணவி!

சென்னை, அசோக்நகர், 19-வது அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கலாவதி (74). இவர், கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் கணவர் மணி. உடல்நலம் பாதிக்கப்பட்ட மணியை கவனித்துக் கொள்ள விழுப... மேலும் பார்க்க

லண்டனிலிருந்து கொரியரில் போதைப்பொருள் கடத்திய கும்பல்; சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்கள்

உலகம் முழுவதும் இருந்து போதைப்பொருள் மும்பைக்குப் பல்வேறு வடிவங்களில் கடத்தி வரப்படுகிறது. அதிகமான நேரங்களில் சிறிய அளவில் கொரியர் மூலம் கடத்தி வரப்படுகிறது. சில நேரங்களில் போதைப்பொருளை மாத்திரையில் அ... மேலும் பார்க்க