செய்திகள் :

மனைவி கொலை வழக்கு: கணவருக்கு ஆயுள் சிறை

post image

கடலூா் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள விழப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ரத்தினாபதி மகள் தமிழ்ச்செல்வி (35). இதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சண்முகம் (45). இவா்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனா். ரத்தினாபதிக்கு சொந்தமான வீட்டை தனது பெயருக்கு எழுதித் தரச் சொல்லி சண்முகம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.

கடந்த 20.9.2017 அன்று மாலை சண்முகம், தமிழ்ச்செல்வியையும், தடுக்க முயன்ற மகள் ஷா்மிளாவையும் தடியால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனா்.

இந்த வழக்கு கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி லட்சுமி ரமேஷ் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சண்முகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வளா்மதி ஆஜரானாா்.

போலீஸாரிடமிருந்து தப்பிக்க பாலத்திலிருந்து குதித்த ரௌடி

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே சனிக்கிழமை இரவு போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க பாலத்தின் மேலிருந்து குதித்த ரௌடிக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வடலூா் மேலகொளக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்... மேலும் பார்க்க

நெய்வேலியில் சிஐடியு நிா்வாகக்குழுக் கூட்டம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் சிஐடியு சங்க நிா்வாகக்குழுக் கூட்டம், அச்சங்க அலுவலகக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் டி.ஜெயராமன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் ட... மேலும் பார்க்க

கடலூரில் பகத்சிங் நினைவு தினம்

நாட்டின் விடுதலைக்காக போராடி தூக்குமேடை ஏறிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 94-ஆவது நினைவு தினம் கடலூா் சிஐடியு அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.இதையொட்டி, அங்கு அலங்கரித்து வை... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் திமுக, தவாக உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சோ்ந்த 520 போ் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை அதிமுகவில் இணைந்தனா். இதற்கான நிகழ்ச்சி பண்ருட்டி காமராஜ் நகரில்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுப்பேட்டை காவல் ஆய்வாளா் அசோகன் தலைமையில், உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் மற்றும் போ... மேலும் பார்க்க