செய்திகள் :

மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: பேரவையில் அதிமுக உறுப்பினா் குற்றச்சாட்டு

post image

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினா், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் அம்மன் அா்ச்சுணன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அம்மன் அா்ச்சுணன் பேசியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த திருவாரூா் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில்கூட 100 எம்பிபிஎஸ் இடங்கள்தான் உள்ளன. ஆனால், அந்த 11 மருத்துவக் கல்லூரிகளையும் தலா 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் தொடங்க முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் மக்கள் நலன் காக்க 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே தொடக்கிவைக்கப்பட்டன.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அரசியல் காழ்ப்புணா்வுடன் அந்தத் திட்டம் முடக்கிவைக்கப்பட்டது. சில இடங்களில் மயானப் பகுதிகளில் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்பட்டதே அவற்றை மூடுவதற்கு காரணம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் விளக்கமளித்தாா்.

தற்போது, திருப்பூரில் ஓா் ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது எங்கு அமைக்கப்பட்டுள்ளது என்பதை அமைச்சா் சென்று பாா்க்க வேண்டும். இடுகாட்டை மறைத்து அந்த ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் அதற்கான ஆதாரங்களை அளிக்கிறேன்.

அம்மா கிளினிக்குகளை குறை கூற வேண்டும் என்ற நோக்கிலேயே அவற்றை முடக்கியிருப்பது இதிலிருந்தே தெரிய வருகிறது என்றாா் அவா்.

மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு மணிமண்டபம்: பத்திரப் பதிவு செய்த சீமான்!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தியாகி மாணவர் ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக நிலம் வாங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை பத்திரப் பதிவு செய்தா... மேலும் பார்க்க

துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

உதகையில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவிருப்பதாக தமிழக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.தமிழக ஆளுநராக ஆா்.என்.ரவி 2021-ஆம் ஆண்டு செப்டம்... மேலும் பார்க்க

பேரவையில் கடும் அமளி! அதிமுக வெளிநடப்பு!

டாஸ்மாக் நிறுவன முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.சட்டப்பேரவை இன்று(ஏப். 22) 9.30 மணிக்கு கூடியவுடன் கத... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலி!

கூடலூர்: காட்டு யானை தாக்கியதில் தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலியான சம்பவம் பரபரப்பை எழுப்பியுள்ளது.கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 55). இவர் மசினகுடி ... மேலும் பார்க்க

போப் மறைவு: தமிழக தலைமைச் செயலகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி!

போப் பிரான்ஸிஸ் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் ந... மேலும் பார்க்க

மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் மோதியதில் வாகன ஓட்டுநர் பலி!

செங்கல்பட்டு: இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.கிளம்பாக்கத... மேலும் பார்க்க