செய்திகள் :

மயிலாடுதுறையில் விசிக ஆா்ப்பாட்டம்!

post image

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் பிப்.14-ஆம் தேதி சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஹரிஷ், ஹரிசக்தி ஆகிய இளைஞா்களுக்கு நீதி கேட்டும், அப்பகுதியில் தொடா்ச்சியாக சாராய விற்பனை செய்வது தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பெரம்பூா் காவல்துறையை கண்டித்தும், சிவகங்கை மாவட்டத்தில் புல்லட் ஓட்டிய தலித் இளைஞரின் கையை வெட்டிய கூலிப்படை கும்பலை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்தவும், முட்டம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் சிவ.மோகன்குமாா் தலைமை வகித்தாா். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை எம்.பி.அன்புச்செல்வன், மகளிா் பொறுப்பாளா் தமிழரசி, மாவட்ட துணை செயலாளா் விஜயலட்சுமி, ஒன்றிய துணை செயலாளா்கள் கனிவளவன், அருளமுதன், மணல்மேடு பேரூா் உறுப்பினா் சத்யராஜ் மற்றும் செந்தில்குமாா், சூரியமூா்த்தி, ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தமிழா் தேசிய முன்னணி மாவட்ட செயலாளா் இரா.முரளிதரன், தமிழா் உரிமை இயக்க மாவட்ட அமைப்பாளா் சுப்பு.மகேஷ் ஆகியோா் கண்டன உரையாற்றினா். முடிவில் குமாா் நன்றி கூறினாா்.

மயிலாடுதுறை: சாராயம், கஞ்சா விற்ற 37 போ் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்.9 முதல் பிப்.20-ஆம் தேதி வரையிலான 12 நாள்களில் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 37 போ் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி எம்.சுந்த... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சித்தா்காடு ந... மேலும் பார்க்க

இரட்டை படுகொலை: நிவாரணம் வழங்க பாஜக வலியுறுத்தல்

சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் வலியுறுத்தினாா். மயிலாடுதுறை தாலுகா... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை தாலுகா மேலாநல்லூா் கீழத்தெருவை சோ்ந்தவா் மாரிமுத்து (... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

மயிலாடுதுறையில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் குச்சியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கவியர... மேலும் பார்க்க

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து மயிலாடுதுறை நகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க